தினமலர் செய்தியால் தண்ணீர் திறப்பு
மேலுார்: குழிசேவல்பட்டியில் நேரடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் பயிர்கள் கருகி விவசாயி களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளி யானது. அதன் எதிரொலி யாக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ரமேஷ், நிர்வாக பொறியாளர் ஜெயராமன் ஏற்பாட்டில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயிர்களை காக்க தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.