உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்

12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: மும்பை தனியார் பள்ளியில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஸ்ரீரங்க தேவேந்திரா, ரோநிட் மனோகர் உள்ளிட்ட 10 பேர் அங்கு தனியார் நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற்றனர்.இவர்கள், 'ரீலே' முறையில் பாக்ஜலசந்தி கடலில் நீந்தி கடக்க முடிவு செய்தனர். இந்திய - இலங்கை அரசுகள் அனுமதியுடன் நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து படகில் இலங்கை தலைமன்னார் சென்றனர்.நேற்று அதிகாலை 12:05 மணிக்கு தலைமன்னார் கடலில் மாணவர்கள் குதித்து நீந்த துவங்கினர். தொடர்ந்து, 38 கி.மீ., நீந்தி நேற்று மதியம் 12:00 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தடைந்தனர். இவர்கள், 11:55 மணி நேரத்தில் நீந்தி கடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ