உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தற்கொலை செய்த பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன் எரித்த உறவினர்கள்

தற்கொலை செய்த பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன் எரித்த உறவினர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பொன்னன்விடுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி, 27, என்ற பெண்ணுக்கும், அதே ஊரைச் சேர்ந்த தாய்மாமன் மகனாகிய பழனிராஜ், 30, என்பவருக்கும், 2021ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. திருமணமான ஓராண்டில், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அதே ஊரைச் சேர்ந்த பிரபா, 26, என்ற பெண்ணை பழனிராஜ், திருமணம் செய்து, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் வசிக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்நிலையில், புவனேஸ்வரி மூன்று ஆண்டுகளாக, கணவனை பிரிந்து தாய் வீட்டில் இருந்தார். அவரது தந்தை ஓராண்டிற்கு முன் இறந்து விட்டதால், மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு, தந்தை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். ஆலங்குடி தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் அந்த பெண்ணின் உடலை, கணவர் பழனிராஜ் வீடு முன் வைத்து, அவரை கைது செய்ய வேண்டும் என, கூறி வந்தனர். பின், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், அந்த பெண் உடலை மீண்டும் ஊருக்கு எடுத்து வந்த அவரது உறவினர்கள், பழனிராஜ் வீட்டின் முன் வைத்து தகனம் செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

jayvee
ஆக 25, 2024 11:10

அடப்பாவிங்களா ..நா கூட இது ஆந்திரா செய்தி என்று நினைத்தேன்.. வாழக சட்டம் ஒழுங்கு.. வாழக திராவிட மாடல் ஆட்சி


SRISIBI A
ஆக 23, 2024 19:29

நல்லவேலை கணவன் வீட்டில் அந்த பெண் தற்கொலை செய்யவில்லை . பிணத்தை போலீஸ் ஸ்டேஷன் முன்பு செய்து இருந்தால் நன்றாக இருக்கும்


அப்பாவி
ஆக 22, 2024 22:07

பொது இடத்தில் பொணத்தை எரிச்சதுக்கு கைது பண்ணி உள்ளே போடணும். உட்டுக்குள்ளே வெச்சி எரிக்க வேண்டியதுதானே. எல்லாம் முடிஞ்ச பின்னாடி போலிசைக் குவிச்சு காமெடி பண்றாங்க.


KRISHNAN R
ஆக 24, 2024 19:27

அந்த ஊரில் போலீஸ் விட ஊர்.. பஞ்சாயத்..... பெருசு


N.Purushothaman
ஆக 22, 2024 14:41

அவனவனுக்கு பொண்ணு கிடைக்கமாட்டேங்குதேன்னு பையனும் அவனது பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் இருக்கானுவ ...இவனுக்கு எப்படி இரண்டாம் தாரமா இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்து வைத்தார்கள் என தெரியவில்லை ...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை