உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தமிழர்களின் வாழ்வியல் முறை அறிவீரா?

தமிழர்களின் வாழ்வியல் முறை அறிவீரா?

கே.சுப்பிரமணி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, மாட்டு கோமியம் குறித்து பேசும்போது, 'ஒரு சன்னியாசி, காய்ச்சல் வந்து அவதிப்பட்ட போது, 'பசுவின் கோமியத்தை குடித்தால், காய்ச்சல் சரியாகும்' என்றார் ஒருவர். அவ்வாறு செய்த சன்னியாசிக்கு, 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியாகி விட்டது' என்று, தான் அறிந்த நிகழ்வை கூறியுள்ளார். இதை சர்ச்சையாக்கி மகிழ்கின்றனர், தமிழகத்து பகுத்தறிவு பகலவர்கள்!அமைச்சர் பொன்முடியோ, 'ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, கவர்னர் போல மாறிவிட்டார். அந்த அடிப்படையில் தான் இக்கருத்தை தெரிவித்துள்ளார். இது ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழியில் நடக்கும் ஆட்சி; தமிழக மக்கள் அறிவியல் ரீதியாக சிந்திக்கக் கூடியவர்கள்; காமகோடி வேண்டுமானால் மாட்டு மூத்திரத்தை குடிக்கட்டும்' என்று கேலி செய்துள்ளார். பொன்முடி இன்று மன்னர் பரம்பரை போல் ஆடம்பர வசதியுடன் இருக்கலாம்; மூன்று தலைமுறைக்கு முன், அவரது எள்ளுப்பாட்டியும், கொள்ளுப் பாட்டியும் கூட, மாட்டுச்சாணத்தை கரைத்து வாசல் தெளித்து, மாட்டுச்சாணத்தால் வீட்டை மேடு பள்ளம் இல்லாமல் மெழுகி, அதில் பாய் போட்டு படுத்தவர்கள் தான் என்பதை மறந்து விட வேண்டாம்!இன்றும் வீட்டு விசேஷ தினங்களில், கிரகபிரவேசத்தில், பண்டிகை நாட்களில் மாட்டுக் கோமியத்தை வீடு முழுதும் தெளிப்பது, தமிழர்களின் வழிபாட்டு கலாசாரம் என்பதை, பொன்முடி அறியவில்லையா? தமிழர்கள் மாட்டுச்சாணத்தை, கோமியத்தை கிருமி நாசினியாக கருதினர்; வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, சாணத்தை கரைத்து தெளித்தனர்; வீட்டிற்குள் விஷப் பூச்சிகள், கிருமிகள் தங்காமல் இருக்க கோமியத்தை தெளித்தனர். தமிழர்களை காட்டுமிராண்டி என்று சொன்னவரை தலைவராக ஏற்றுக் கொண்ட பொன்முடியால், கோமியத்தை ஏற்க முடியாமல் போகலாம்; ஆனால், இதுதான் தமிழர்கள் சுகாதாரம் பேணும் வாழ்வியல் முறை!ஐ.ஐ.டி., இயக்குனர் தான் கற்று அறிந்ததை சொல்கிறார்; அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? தமிழர்களின் வாழ்வியல் முறை அறிவீரா? கே.சுப்பிரமணி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, மாட்டு கோமியம் குறித்து பேசும்போது, 'ஒரு சன்னியாசி, காய்ச்சல் வந்து அவதிப்பட்ட போது, 'பசுவின் கோமியத்தை குடித்தால், காய்ச்சல் சரியாகும்' என்றார் ஒருவர். அவ்வாறு செய்த சன்னியாசிக்கு, 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியாகி விட்டது' என்று, தான் அறிந்த நிகழ்வை கூறியுள்ளார். இதை சர்ச்சையாக்கி மகிழ்கின்றனர், தமிழகத்து பகுத்தறிவு பகலவர்கள்!அமைச்சர் பொன்முடியோ, 'ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, கவர்னர் போல மாறிவிட்டார். அந்த அடிப்படையில் தான் இக்கருத்தை தெரிவித்துள்ளார். இது ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழியில் நடக்கும் ஆட்சி; தமிழக மக்கள் அறிவியல் ரீதியாக சிந்திக்கக் கூடியவர்கள்; காமகோடி வேண்டுமானால் மாட்டு மூத்திரத்தை குடிக்கட்டும்' என்று கேலி செய்துள்ளார். பொன்முடி இன்று மன்னர் பரம்பரை போல் ஆடம்பர வசதியுடன் இருக்கலாம்; மூன்று தலைமுறைக்கு முன், அவரது எள்ளுப்பாட்டியும், கொள்ளுப் பாட்டியும் கூட, மாட்டுச்சாணத்தை கரைத்து வாசல் தெளித்து, மாட்டுச்சாணத்தால் வீட்டை மேடு பள்ளம் இல்லாமல் மெழுகி, அதில் பாய் போட்டு படுத்தவர்கள் தான் என்பதை மறந்து விட வேண்டாம்!இன்றும் வீட்டு விசேஷ தினங்களில், கிரகபிரவேசத்தில், பண்டிகை நாட்களில் மாட்டுக் கோமியத்தை வீடு முழுதும் தெளிப்பது, தமிழர்களின் வழிபாட்டு கலாசாரம் என்பதை, பொன்முடி அறியவில்லையா? தமிழர்கள் மாட்டுச்சாணத்தை, கோமியத்தை கிருமி நாசினியாக கருதினர்; வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, சாணத்தை கரைத்து தெளித்தனர்; வீட்டிற்குள் விஷப் பூச்சிகள், கிருமிகள் தங்காமல் இருக்க கோமியத்தை தெளித்தனர். தமிழர்களை காட்டுமிராண்டி என்று சொன்னவரை தலைவராக ஏற்றுக் கொண்ட பொன்முடியால், கோமியத்தை ஏற்க முடியாமல் போகலாம்; ஆனால், இதுதான் தமிழர்கள் சுகாதாரம் பேணும் வாழ்வியல் முறை!ஐ.ஐ.டி., இயக்குனர் தான் கற்று அறிந்ததை சொல்கிறார்; அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
ஜன 26, 2025 00:20

கோமியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதை அங்கு பீர் ஆக மாற்றி இறக்குமதி செய்தால் ஏளனம் செய்வோர் வெளிநாட்டு சரக்கென்று வாங்கி குடித்து மகிழ்வார்கள்.


Mano
ஜன 25, 2025 16:44

கூகிளில் கோமியம் cow urine சயின்டிபிக் ரிசர்ச் செய்து பாருங்கள். உங்களுக்கு அதில் நன்மை பயக்கும் விஷயங்களை ஆராய்ச்சி செய்து முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. நமது அறிவு facebook instagram twitter எவனோ போடும் வீடியோவை பார்த்தே அல்லவா காலம் ஓடுகிறது.


M Ramachandran
ஜன 25, 2025 12:55

இனிமேல் ஈவேரா பூச்சாண்டி கட்டி தொங்க்கி கொண்டிருக்கா முடியாது. மாருங்க இல்லையேல் தூக்கி தூக்கி அடிக்க படுவீர்கள். இனி தமிழ் நாட்டில் செல்லு படியாகாது. பட்டி தொட்டி எல்லாம் வெங்காயத்தை தோல் உரிக்கிறார்கள். திராவிடமும் இவர்கள் செய்யும் செயல்களால் சந்தி சிரிக்குது. சீக்கிரம் மூடு விழா எதிர் பார்க்க படுகிறது. தைரியமாக எல்லோரும் சீமான் மேடையில் பாடி கட்டிய பாடல் பாடினால் கைது என்று ஸ்டாலின் மிரட்டல் விட்ட எல்லோரும் பாட ஆர்மபித்து விடுவார்கள். ஊபீஸ்கள் முக்காடிட்டு பதுங்கு வார்கள்.


Sridhar
ஜன 25, 2025 12:10

ஒரு சாதாரண மனிதர் கோமியத்தை பற்றி கூறுவதற்கும், IIT போன்ற விஞ்ஞான அமைப்புகளில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கோமியத்தின் மீதுள்ள அபிப்ராயத்தை கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னவர் வெறும் நம்பிக்கை அடிப்படையிலும் தங்கள் அருகாமையில் நடந்த நிகழ்ச்சி மற்றும் அதன் விளைவுகள் அடிப்படையில் அவருடைய கருத்தை தெரிவிப்பார். விஞ்ஞானிகளோ சற்றே ஆழமாக சென்று அந்த பொருளின் மூலக்கூறுகளை ஆய்வு செய்து, பண்புகளை அறிந்து, அதன் விளைவுகளுக்கு பலமுறை பலரிடம் பரிசோதனைகள் செய்து, ஆராய்ச்சி முடிவுகளை அறிவிப்பார். காமகோடியும் அவருடைய பின்புலத்திற்கு, விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளை முதலிலேயே ஆதாரமாக காண்பித்து இந்த விஷயத்தை சொல்லியிருந்தால், "பகுத்தறிவு" பேசும் அறிவிலிகளின் வாயை திறக்கவிடாமல் செய்திருக்கமுடியும். அதற்க்கு மாறாக, முதலில் பேசும்போது சாதாரண மனிதர்கள் பேசும்படி பேசியதோடு மட்டுமில்லாமல், அதற்குப்பிறகும், விஞ்ஞான ஆதாரங்களை அழுத்தமாக தெளிவாக காட்ட தவறிவிட்டார். அரைகுறை அறிவோடு பகுத்தறிவு பேசும் திருட்டு கும்பலுக்கு ஆணித்தரமாக பலத்த குரலில் ஓங்கி அடிக்காவிட்டால், அவர்கள் தங்கள் ஊடக பலத்தை வைத்துக்கொண்டு எதோ தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோன்ற பிம்பத்தை தங்கள் ஆதரவாளர்களிடம் பதித்துவிடுவார்கள். ஆகவே, நம் பாரம்பரிய விஷயங்களை இந்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதற்கு விஞ்ஞானமும் ஏரணமும் நிறையவே தேவைப்படுகிறது. இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு, ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது - பாலையே காய்ச்சி கொடுக்கவேண்டும் என்ற நிலையில், கோமியத்தை அப்படியே குடிப்பது பாதுகாப்பானதுதானா? இதற்கும் அவரே விளக்கமளித்தால் நன்று.


sankaranarayanan
ஜன 25, 2025 11:32

பொன்முடி நன்கு படித்தவர் உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்து பதவி போனவர் அவர் இப்படி பேசலாமா கோமியத்தை மீது நம்பிக்கை இருப்பவர்கள் அதை பயன்படுத்தலாமே தவிர இவரை யாருமே கட்டாயப்படுத்தி பயன்படுத்த சொல்லவில்லை மாட்டினால் நமக்கு என்ன பயன் என்ற தலைப்பில் காமகோடி அவர்கள் சொன்னதை தெரிந்த விஷயத்தை இந்த மனிதனுக்கு தெரியவில்லையே அவருடைய புத்திக்கு சற்றும் தென்படவில்லையே என்றுதான் நினைக்க மிகவும் வேதனையாக இருக்கிறது வருத்தமாகவே இருக்கிறது


angbu ganesh
ஜன 25, 2025 09:56

மனித மலத்தை சாப்பிடும் இவனுக்கெல்லாம் பதில் எதுக்கு சொல்லிக்கிட்டு உண்மை நம்ம - தின்னுட்டு நம்ம -ரத்தை குடிச்சிட்டு வாழும் தரம் கேட்ட அலுமினிய முடி எல்லாம் மனுஷனே இல்ல


Barakat Ali
ஜன 25, 2025 08:59

காமகோடி யாரையும் கட்டாயப் படுத்தவில்லை ....... வேலைவாய்ப்புக்கு அல்லாமல் மதுவிற்பனைக்கு டார்கெட் வைத்து அதை அச்சீவ் செய்து மகிழும் அரசைத் தேர்ந்தெடுத்த சமூக விரோதிகளுக்கு இவரைக் குறை சொல்ல அருகதை இல்லை ......


Dharmavaan
ஜன 25, 2025 08:13

ஈவெராவின் அடிமைகளுக்கு என்ன விஞ்ஞான அறிவு இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை