உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நம்ம பேச்சை கேட்பாரா?

நம்ம பேச்சை கேட்பாரா?

கோவை, காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு நடத்தினார். ஊழியர்களிடம் அவர் பேசுகையில், 'நாம் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவு துாய்மையாகவும், சுவையாகவும் இருப்பது மிக முக்கியம். அதை விட வாடிக்கையாளர்களை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும்; கனிவாக பேச வேண்டும்.'எப்போதும், எந்த விஷயத்திலும் அலட்சியம் கூடாது. பணியில் திறமையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். மிகுந்த மரியாதையோடு வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.இதை கேட்ட ஊழியர் ஒருவர், 'இவ்வளவு நேரம் அவர் சொல்றதை நாம கேட்டோம்... ஆனா, நாம சொல்றதை அமைச்சர் கேட்பாரா...?' என முணுமுணுக்க, மற்றொரு ஊழியர், 'நம்ம கோரிக்கை எல்லாம் அமைச்சர் காதுல விழவே விழாது...' என புலம்பியபடி நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dharmavaan
ஜன 25, 2025 08:09

சாத்தான் வேதம் ஓதுகிறது ஊரை ஏமாற்றி யோகியன் வேடம் போட


D.Ambujavalli
ஜன 25, 2025 06:10

ஆய்வு எல்லாம், வந்தோமா, நாலு வார்த்தை பேசிவிட்டு, நல்ல விருந்தை முடித்துக்கொண்டு போனோமா, முதல்வருக்கு கணக்கு காட்டினோமா என்ற அளவைத் தாண்டி, குறை கேட்கவா வருகிறார்கள் ?


சமீபத்திய செய்தி