பழமொழி : விளக்கெண்ணெயை தடவிக் கொண்டு உருண்டாலும், ஒட்டுவது தான் ஒட்டும்.
விளக்கெண்ணெயை தடவிக் கொண்டு உருண்டாலும், ஒட்டுவது தான் ஒட்டும்.பொருள்: உடல் முழுதும் விளக்கெண்ணெய் தடவி, பொன் துகளில் உருண்டாலும், எந்த அளவு ஒட்ட முடியுமோ, அந்த அளவு தான் ஒட்டும்; அதுபோல, நாம் எந்த அளவு உழைத்தாலும், தகுதியின் அடிப்படையில் தான் பலன் கிட்டும்.