/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்
பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பஜார் பகுதியில் பேரூராட்சி அலுவலகம் எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இதை கடப்பாக்கம், ஆலம்பரைக்குப்பம், கப்பிவாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள்பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்காக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் ஏராளமானோர் தினசரி பயன்படுத்துகின்றனர்.பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் சிரமப்படுகின்றனர். ஆகையால் பேரூராட்சி அதிகாரிகள், கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - சி. கண்ணன், செய்யூர்.