/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்
பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.இதை வெண்ணாங்குப்பட்டு, தேன்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இப்பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் சிரமப்படுகின்றனர்.பேரூராட்சி அதிகாரிகள், வெண்ணாங்குப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- இ.கண்ணன்,செய்யூர்.