புகார் பெட்டி// : ஆமை ஓடுகளால் கடற்கரையில் சீர்கேடு
கடல் ஆமைகள், கடந்த இரு மாதங்களாக படகுகள், இன்ஜின் மற்றும் வலைகளில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்குகின்றன திருவொற்றியூர் - திருச்சினாங்குப்பம் கடற்கரையில் ஒதுங்கிய, 10க்கும் மேற்பட்ட ஆமைகள் அகற்றப்படாமலே விட்டு விட்டனர்.இறந்த ஆமைகளை, காகங்கள் கொத்தி தின்றது போக, எலும்பு கூடாக கடற்கரைகளில் ஆங்காங்கே கிடக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.நோய்த்தொற்று பரவும் அச்சம் காரணமாக, கடற்கரைக்கு குழந்தைகளுடன் வர முடியவில்லை. கடற்கரையை துாய்மையாக பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாண்டியராஜ், திருச்சினாங்குப்பம்.