உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர்:புகார் பெட்டி; சாலையில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர்:புகார் பெட்டி; சாலையில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு. இங்கிருந்து, எறையாமங்கலம், நுங்கம்பாக்கம், கம்மவார்பாளையம் வழியாக மேல்நல்லாத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.குறுகலான இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி மப்பேடு, கீழச்சேரி, பண்ணுார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சென்று வருகின்றனர்.இப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையிலேயே உலா வருகின்றன. இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடைகளை பிடித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- என். குமார்,பண்ணுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி