உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில் முட்புதர்வாகன ஓட்டிகள் கடும் அவதி

நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில் முட்புதர்வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், கரூர் அருகே, நெரூர் - திருமுக்கூடலுார் சாலையின், இருபுறமும் செடிகள் முளைத்து முட்புதராக காட்சியளிக்கிறது. இதனால், சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், நெரூர் - திருமுக்கூடலுார் செல்லும் சாலையில், புதுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகள் உள்ளன.மேலும், காவிரியாற்றுடன், அமராவதி ஆறு இணையும் இடமான, திருமுக்கூடலுாரில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. அதற்கு, பிரதோஷம், கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனுார் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.ஒருபக்கம் காவிரியாறு, மறுபக்கம் விவசாய நிலம் உள்ள, நெரூர்-திருமுக்கூடலுார் சாலையின் ஒரத்தில், மழை காரணமாக செடிகள் அதிகளவில் முளைத்து முட்புதராக மாறி, சாலையை மறைத்துள்ளது. மேலும், நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில், இரவு நேரத்தில் மின் விளக்குகளும் சரிவர எரிவது இல்லை. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் சாலையில் செல்வதை கூட, கவனிக்க முடியவில்லை. வாகன ஓட்டிகளுக்கு சாலை தெரியாமல், விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.எனவே, கரூர் அருகே நெரூர் - திருமுக்கூடலுார் சாலையில், உள்ள செடிகளை அகற்றி, மின் விளக்குகள் அனைத்தும் எரியும் வகையில், நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம பஞ்சாயத்துக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை