தகவல் சுரங்கம் : பிரிக்ஸ் பின்னணி
தகவல் சுரங்கம்'பிரிக்ஸ்' பின்னணி'பிரிக்ஸ்' அமைப்பின் 16வது மாநாடு ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தியாவில் மூன்றுமுறை இதன் மாநாடு நடைபெற்றுள்ளது. முதன்முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா இணைந்து 2009 ஜூன் 16ல் 'பிரிக்' அமைப்பை தொடங்கின. பின் 2010ல் தென் ஆப்ரிக்கா இதில் சேர்ந்து 'பிரிக்ஸ்' ஆனது. அதன்பின் 2024ல் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என நான்கு நாடுகள் இணைந்ததை தொடர்ந்து, உறுப்பு நாடுகள் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. உலக நிலப்பகுதியில் 30 சதவீதம், மக்கள்தொகையில் 45 சதவீதம் இந்நாடுகளில் உள்ளன.