சக்தி மிக்க மூலிகை!
மூலிகைகள் நோய்களை குணப்படுத்தும்; சில மூலிகைகளுக்கு சில சிறப்பு பண்புகள் உண்டு. அதனால், மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று உரிய முறையில் பயன்படுத்துவது நல்லது.மூலிகை சாறை சொட்டுச் சொட்டாக விருப்பத்துடன் அருந்த வேண்டும். எந்த மூலிகை சாறையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அருந்தக் கூடாது. மூலிகை இலையை தனியாக சாப்பிட தயங்கினால், கீரைகளுடன் சமைத்தோ, சூப் தயாரித்தோ சாப்பிடலாம்.மூலிகைகளின் சிறப்பு பண்புகளை பார்ப்போம்...* துளசி இலைச்சாறு சாப்பிட்டால், ரத்தத்தில் விஷத்தன்மை வெளியேறும் * அருகம்புல் சாறு சாப்பிட்டால், ரத்தத்தில் ஹீமோ குளோபின் அதிகரிக்கும்; தோல் வியாதிகளுக்கும் இது அருமருந்து* வாழைத்தண்டு சாறை மருத்துவர் ஆலோசனைப்படி, உரிய இடைவெளியில் சாப்பிட்டால், சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யும்* கொத்துமல்லிச்சாறு பசியைத் துாண்டும்; வாதம், நரம்புதளர்ச்சியைக் குணமாக்கும்* புதினாச்சாறு சிறந்த மலமிளக்கி; ஜீரணக்கோளாறை சரிசெய்யும்* வல்லாரைச் சாறு, மஞ்சள் காமாலை, நரம்பு தளர்ச்சி, ஞாபசக்திக்கு அருமருந்து* துாதுவளைச்சாறு நரம்பு தளர்ச்சியை போக்கும்; சளியை விரட்டும்* மணத்தக்காளிச் சாறு வாயுத்தொல்லையை தீர்க்கும்* தும்பைச்சாறு, இருமல், மார்புச்சளிக்கு அருமருந்து* வெங்காயம், பூண்டு கலந்த சாறு கெட்டக்கொழுப்பை குறைக்கும்* காய்கறி சாறு சாப்பிட்ட, 20 நிமிடத்தில், ஜீரணமாகி சக்தியாக மாறும்* இஞ்சியை அரைத்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்தால், சுண்ணாம்பு மாதிரி அடியில் தங்கும். இதை அகற்றி, தெளிந்ததை தேன் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நலம் தரும்.