இரவில் பனி பெய்வது எதனால்?
பூமியின் பரப்பில் நிகழும் உறைவித்தலால் பனி உருவாகிறது. சில சமயங்களில் இரவில் காற்றை விட பூமி அதிகமாகக் குளிர்ந்து விடுகிறது. காற்றில் உள்ள ஆவி, குளிர்ந்த தரைப்பரப்பில் உள்ள இலைகள், தழைகள், பொருட்கள் ஆகியவற்றின் மீது விடியற்காலையில் படியும் போது, அது உறைந்து பனித் திவலையாக மாறுகிறது. பூமி மிகவும் குளிர்ந்து இருந்தால் ஈர ஆவி இறுகி உறை பனியாக மாறி விடுகிறது. தரையில் இருந்து எழும் ஈர ஆவி, அதை விட குளிர்ந்த இலையில் படுமானால், அது இறுகி வேறு வகை பனிப் படிவாக இருக்கும்.