கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு!
மலையாளத்தில், 'கறுப்பினழகு...' என்றாலும், தமிழில், 'கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...' என்று பாடினாலும், மக்கள் மனதில், கறுப்பு நிறத்தின் மேல் ஒரு வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது.'படித்தவர்கள் அதிகம் வாழும் கேரளாவை, 'கடவுளின் சொந்த நாடு' என்று அழைத்தாலும், இங்கும், கறுப்பு நிறம் மீது, வெறுப்பு இருக்கிறது...' என்கிறார், பெரும்பாவூரை சேர்ந்த பி.எஸ்.ஜெயா என்ற பெண் ஓவியர். இதனால், கறுப்பை வெறுக்கும் மக்களுக்கு எதிராக, தன் உடல் முழுவதும் கறுப்பு சாயம் பூசி, 125 நாட்கள் பொது இடங்களில் நடமாடியுள்ளார், ஜெயா.— ஜோல்னாபையன்.