கவிதைச்சோலை!
ஒருதலைக் காதலர்களே...* ஒரு தலைக் காதலர்களே வாருங்கள்உட்கார்ந்து பேசுவோம்இனியும் வேண்டாம்இன்னொரு படுகொலை!* உயிரும் உயிரும்விளையாட வேண்டிய களம்பிறர் உயிரெடுக்குமாறுவிளையாடுவது தகுமோ!* ஏற்றுக் கொள்ளா விட்டால்அவளைத் தூற்றாதேஏடு அதை எடுகற்பனையோடு நனை - அதைகவிதையாகப் புனை!* காதலில் தோற்பவருக்குஎளிதில் வசமாகும் கவிதைமுயன்று பார்...காதல் தோல்வியும்கவிதை தொழிலுக்கோர் முதலீடு...நிறைய கவிஞர்கள் சான்று!* எடுக்க நினைப்பதிலும்அடைய நினைப்பதிலும்இல்லை காதல்...கொடுக்க நினைப்பதில் தான்மிடுக்குடன் நிற்கும் காதல்!* உன் காதல்அன்பின் ஆணிவேராய்இருந்திருந்தால் நிச்சயம்அது, 'ஆசிட்' தூக்காது!* நா தழு தழுத்தாலும்விழியில் நீர் பிறந்தாலும்வலியினை மறைத்துஅவளை வாழி, வாழி எனஅர்ச்சனைப் பூக்களைஅள்ளித் தூவும்!* காதலுக்காகஉயிரைக் கொடுத்தலே மரபு!உயிரை எடுத்தல் மரபன்று...அது காதலும் அன்று!* 'உன்னை கொடு, என்னைத் தருவேன்'இது வியாபாரம்...'எனக்கு கிடைக்காததுஎவருக்கும் கிடைக்கக் கூடாது'இது குரோதத்தின் உச்சம்...இதில் எங்கிருக்கிறது காதல்!* காதலி...காதலி மறுத்தாலும்அவளைத் தொந்தரவு செய்யாமல்உன் காதலைக் காதலி!* இரு தலைக் காதலில்காதலியுடன் வாழலாம்ஒரு போகியாய்...ஒரு தலைக் காதலில்காதலியை வாழ்த்தலாம்ஒரு யோகியாய்!* இப்போதுஒரு தலைக் காதல் மீதானஎல்லாரின் அலட்சியக் குறியீட்டையும்அற்புதமான ஒருவியப்புக்குறியாய் மாற்றலாம்!— த.மலைமன்னன், புனல்வேலி.