கவிதைச்சோலை!
காத்துக்கிடப்பேன்!நீ தடம் பதித்துகடந்து போனபாதைகளில்வெள்ளரி வல்லிகளாய்படர்ந்திருப்பேன்!நீ ஆடை களைந்துமேனி கழுவியதடாகத்தில்தாமரைப் பூக்களாய்தளிர்த்து நிற்பேன்!நீ இரை காட்டிசிறை பிடிக்கும்துாண்டி முள்ளில்தொங்கும் மீன்களாய்துாங்கி கிடப்பேன்!நீ தொட்டு நட்டவாசப் பூக்களின்வாசல்களில்வளமாய்வந்து கிடப்பேன்!நீ தேசம் கடந்துதுாரம் போனகாலங்களில்முற்றும் துறந்த முனிவனாய்தியானித்திருப்பேன்!நீ முத்தம் கொடுத்துஇச்சை தீர்த்தஆசைகளைபிச்சை வேண்டுபவனாய்யாசித்திருப்பேன்!நீ மரித்து புதைந்துமண் சுமக்கும்மயான பூமியில் நிழல் தரும் மரமாய்நின்றிருப்பேன்!நீ சொல்லாமலே சென்றசொர்க்கலோகவாசல்படிகளில்கால் செருப்பாய்காத்துக் கிடப்பேன்!க.அழகர்சாமி, கொச்சி.