உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்க்கைக்கு நன்று!மனிதர்களே...எப்போதும்வாய்ப்புகளை எதிர்பார்த்துகாத்திருக்காதீர்கள்உங்களுக்கான வாய்ப்பைநீங்களே உருவாக்குங்கள்!பேராசையோடுபெரிதாக எதிர்பார்த்துகாத்திருந்து ஏமாந்துநஷ்டமடைவதை விடநியாயமான ஆசையோடுஅளவாக எதிர்பார்த்துவிரைந்து செயலாற்றிலாபமடையுங்கள்!வாழ்க்கை என்பதுதிரும்ப முடியாத ஒருவழிப்பாதைஅதில் வாய்ப்பு என்பதுகண்ணெதிரே பிரிந்து போகும்பல வழிப்பாதைஉங்களுக்கான பாதையைநீங்களே தேர்ந்தெடுங்கள்!விதையிலிருந்துமுளைவிடும் வேர்மண்ணை மட்டுமே எதிர்பார்த்துஒருபோதும் காத்திருக்காதுகடினப் பாறையிலும் கூடமுட்டி மோதி துளிர் விடும்...அதுபோல்,வாய்ப்புகளுக்கானஉங்கள் தேடல் முயற்சியைவைத்துக் கொள்ளுங்கள்!மீன் பிடிக்க செல்பவருக்குதுாண்டில் அவசியம்என்பது போல்வாய்ப்புகளை நாடும் முன்உங்கள் திறமைகளைமுதலில் எடை போடுங்கள்!முயற்சிகள் கைவிட்டாலும்திறமைகள் கைவிடாது;வாய்ப்புகள் கைவிட்டாலும்தன்னம்பிக்கை கைவிடாது;ஒன்று போனால் இன்னொன்றுஎன்று முன்னேறுவதேவாழ்க்கைக்கு நன்று!ஆர்.ஜெயசங்கரன், வானுார்,விழுப்புரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !