சமஸ்கிருதம் பேசும் கிராமத்தினர்!
இன்றும் சமஸ்கிருதம் பேசும் மக்கள் வாழும் கிராமம் இருக்கிறது என்றால், ஆச்சரியம் தானே! கர்நாடகாவில், துங்கா நதியின் இரு புறங்களிலும், மாத்தூர் மற்றும் ஹொசஹள்ளி என்று இரு கிராமங்கள் உள்ளன. இங்கு பரவலாக சமஸ்கிருதம் பேசப்பட்டாலும், சங்கேதி என்ற மொழியும் பேசுகின்றனர்; தமிழ் மற்றும் கன்னடம் கலந்த மொழி தான் சங்கேதி. இங்குள்ள சிறுவர்கள், ஆர்வத்துடன் வேதங்களை பயில்கின்றனர். பள்ளிகளில், சமஸ்கிருதம், இரண்டாம் மொழியாக உள்ளது. — ஜோல்னாபையன்