அதிக வருவாய்க்கு சிவப்பு வாழை நிற மாம்பழம்
சிவப்பு வாழை நிற மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் களிமண், செம்மண்ணில், விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில் பழங்களை சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், சிவப்பு வாழை நிற மாம்பழம், விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், விவசாயிகள் சாகுபடி செய்யலாம். இந்த மாங்காய் செவ்வாழை போல நீளமாகவும், அதிக சுவையுடன் இருக்கும்.குறிப்பாக, தாய்லாந்து நாட்டில் அதிகமாக விளையும் மாம்பழம் என்பதால், நம்மூர் செம்மண்ணுக்கு அருமையாக வளர்கிறது.கொத்து கொத்தாக காய்கள் காய்ப்பதால், கூடுதல் எடை கிடைக்கும். அதிக வருவாய் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு ஏற்ற ரகம்.இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: கே.சசிகலா,94455 31372.