உள்ளூர் செய்திகள்

அதிக விளைச்சல் தரக்கூடியது வியட்நாம் ரக சாத்துக்குடி

வியட்நாம் ரக சாத்துக்குடி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.இதில், வியட்நாம் ரக சாத்துக்குடி சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு வளர்கிறது. மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்கள் என, இரு விதங்களில் சாகுபடி செய்யலாம்.குறிப்பாக, பிற ரக சாத்துக்குடி பழங்களை காட்டிலும், வியட்நாம் சாத்துக்குடி அதிகமாக விளைச்சல் தரக்கூடியது. புதுவிதமான சுவையுடன் இருப்பதால், கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்ட மாட்டர்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,98419 86400.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !