மதிப்புகூட்டிய உணவு பொருட்களுக்கு உகந்தது வெள்ளை கவுனி நெல்
வெள்ளை கவுனி பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:பலவித பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், வெள்ளை கவுனி பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன்.இதை 135 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். இந்த வெள்ளை கவுனி ரக நெல், செம் பழுப்பு நிறத்தில் இருக்கும். அரிசி வெள்ளை நிறத்தில் இருக்கும்.இந்த ரக நெல், கதிர் நாவாய் பூச்சி, தண்டு துளைப்பான், குலை நோய் எதிர்ப்பு திறன் உடையது.பாரம்பரிய ரக நெல்லை, ரசாயனம் இன்றி இயற்கை உரங்கள் போட்டு சாகுபடி செய்யும் போது, குறைந்த நெல் மூட்டைகள் மகசூல் கிடைக்கும். இந்த நெல்லை அரிசி மற்றும் மாவாக மதிப்பு கூட்டும் போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.குறிப்பாக, வெள்ளை கவுனி ரக அரிசி, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், பால் கொழுகட்டை உள்ளிட்ட மதிப்பு கூட்டிய உணவுப் பொருட்கள் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,96551 56968.