உண்டியலில் ரூ.2.07 லட்சம்
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை மவுலீஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.பங்கார்பேட்டை தொப்பனஹள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான சுந்தர ராம மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணி பங்கார்பேட்டை தாலுகா துணை தாசில்தார் சீனிவாச மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 2.07 லட்சம் ரூபாய் இருந்தது என்பதை அறிவித்தார்.