உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முக்கிய துறைகள் ஏப்ரலில் வளர்ச்சி அதிகரிப்பு

முக்கிய துறைகள் ஏப்ரலில் வளர்ச்சி அதிகரிப்பு

புதுடில்லி : நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி அதிகரிப்பே, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். இந்த எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில் 6 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஏப்ரலில், 4.60 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஏப்ரலில் நிலக்கரி, உருக்கு மற்றும் சிமென்ட் ஆகியவற்றின் உற்பத்தி சரிந்தது. உரத் துறையின் வளர்ச்சி மைனஸ் நிலையில் இருந்தது.நாட்டின் தொழில் துறை உற்பத்தியைக் கணக்கிடுவதில், இந்த எட்டு துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்