இறக்குமதி குறித்து கவலை வேண்டாம்
நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் வரை, நாம் இறக்குமதி குறித்து அதிகம் கவலைப்படக் கூடாது. உலகப் பொருளாதார வளர்ச்சி 3.50 சதவீதமாக இருக்கும்போது, இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் நிலையில், நம் நுகர்வு திறனும், இறக்குமதியும் அதிகரித்தே காணப்படும். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களிலும் இறக்குமதிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் தயாரிப்புக்கு தேவையான சில மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது அவசியமானது.சுனில் பர்த்வால்வர்த்தகத்துறை செயலர்