உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவில் டேப்லெட் தயாரிப்பு; ஒன்பிளஸ் நிறுவனம் துவக்கியது

இந்தியாவில் டேப்லெட் தயாரிப்பு; ஒன்பிளஸ் நிறுவனம் துவக்கியது

புதுடில்லி: சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான 'ஒன்பிளஸ்' நிறுவனம், நம்நாட்டின் மின்னணு பொருட்கள் தயாரிப்பாளரான 'பகவதி புராடக்ட்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, உள்நாட்டில் பிரீமியம் டேப்லெட்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இது குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 'ஒன் பிளஸ் 3' மற்றும் 'ஒன்பிளஸ் பேடு லைட்' தயாரிப்புகளை மேற்கொள்ள, பகவதி புராடக்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து உள்ளோம். உள்நாட்டில் ஸ்மார்ட்போன் தயாரிப்போடு, கூடுதலாக டேப்லெட் தயாரிப்புகளையும், இந்நிறுவனத்துக்கு சொந்தமான கிரேட்டர் நொய்டா ஆலையில் துவங்கி உள்ளோம். இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில், டேப்லெட் வடிவமைப்பை மேற்கொள்ள, பகவதி புராடக்ட்ஸ் நிறுவனம் முழுமையாக ஆதரவு அளிக்கும். உள்நாட்டில் டேப்லெட் தயாரிப்பை துவங்கியதன் வாயிலாக, இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

பகவதி புராடக்ட்ஸ் பின்னணி

மொபைல் போன், எல்.இ.டி., டிவி, டேப்லெட் மற்றும் பேட்டரி, சார்ஜர் உள்பட நுகர்வோர் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. டில்லியை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், கடந்த 2002ல் துவங்கப்பட்டது. இதுவரை 4 கோடி போன்கள் மற்றும் 30 லட்சம் டிவி தயாரித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு ராஜஸ்தானின் பிவாடி, தெலுங்கானாவின் ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஆலைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை