கர்நாடகாவில் டாடா ரியால்ட்டி தொழில் பூங்காவுக்கு ஒப்புதல்
பெங்களூரு:கர்நாடகாவில் 3,273 கோடி ரூபாய் முதலீட்டில், டாடா ரியால்ட்டி அண்டு இன்ப்ராட்ரெக்சர் நிறுவனம், தொழில் பூங்கா அமைக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே, 25.5 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த பூங்காவில், ஐ.டி., மற்றும் அது சார்ந்த சேவைகளுக்கான கட்டமைப்பை, டாடா ரியால்ட்டி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக 5,500 பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.