பிரிட்டனுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிக்கிறது வர்த்தக போட்டி
திருப்பூர்: வங்கதேசம், வியட்நாம், கம்போடியா நாடுகளின் போட்டி அதிகரிப்பால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி, பிரிட்டனுக்கு ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய ஏற்றுமதியாளர்கள் தயாராக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்தியா - பிரிட்டன் இடையேயான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், சீரான நிலையில் இருந்து வந்தது. டையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, பிரிட்டன் இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு, 5 முதல் 6 சதவீதமானது. இது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள், இரட்டை இலக்கத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், பிரிட்டனுக்கு ஏப்., முதல் ஆக., வரை, 5,168 கோடி ரூபாய்க்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 4,980 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்தது. 2023 - 24 நிதியாண்டில் இது 4,687 கோடி ரூபாயாக இருந்தது.