ரெலிகேர் அதிகாரிகளின் இடங்களில் ரெய்டு
புதுடில்லி:நிதிச் சேவை நிறுவனமான 'ரெலிகேர் என்டர்பிரைசஸ்' தலைவர் ராஷ்மி சலுஜா மற்றும் மூன்று அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்திஉள்ளது. 'ரெலிகேர் பின்வெஸ்ட்' நிறுவனத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக, கடந்த ஆண்டு பதியப்பட்ட எப்.ஐ.ஆர்., அடிப்படையில் நடந்த சோதனையில், ராஷ்மி சலுஜா உட்பட பலரது டிமேட் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், சோதனையில் ஆவணங்களோ, மின்னணு பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை என, நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுஉள்ளது.