உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவாதத்திற்கு மத்திய அரசு தயார்: பிரதமர்

விவாதத்திற்கு மத்திய அரசு தயார்: பிரதமர்

கோல்கட்டா: லோக்பால் விஷயத்தில் நியாயமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், ஊழலை ஒழிக்க மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார். ஊழலை ஒழிப்பதற்கான மந்திரக்கோல் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று கூறிய அவர், ஊழலை ஒழிக்க மத்திய அரசு முறையான திட்டங்களை வகுத்திருப்பதாகவும் தெரிவித்தார். ஊழல் ஒழிப்பு விவகாரத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கு கடுமையான நடைமுறைகள் தேவை என்றும், இவ்விவகாரத்தில் நியாயமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை