உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பால்கேன்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, ரயில் சேவை, மாணவர் விடுதிகளுக்கு விலக்கு:மத்திய நிதியமைச்சர்

பால்கேன்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, ரயில் சேவை, மாணவர் விடுதிகளுக்கு விலக்கு:மத்திய நிதியமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அனைத்து வகை பால் கேன்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்கும் விடுதிகள்,ரயில் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.புதுடில்லியில்ஜி.எஸ்.டி.கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிர்மலா கூறியதாவது:எஃகு,அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால்கேன்களுக்கும் ஒரே சீரான 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும் அட்டைபெட்டி, சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

மாணவர்கள் விடுதிகளுக்கு விலக்கு

மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். மாணவர்கள் 90 நாட்கள் தங்க வேண்டும்.மாத வாடகை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்படுகிறது.

ரயில் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு

ரயில்நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை , பொருட்கள் வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கான சேவை, மற்றும் ரயில் நிலையங்களில் நடைமேடை பயணச்சீட்டுகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Govindarajan Somasundaram
ஜூன் 23, 2024 12:52

மத்திய அமைச்சர் தனிப்பட்ட முறையில் எந்த வரியையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. அனைத்து மாநில மந்திரிகளும் சொல்வதை வைத்தே வரி நிர்ணயிக்கப்படுகிறது. அவர் பெட்ரோல் மற்றும் டீசலை GST யில் கொண்டுவர முயலுகிறார். ஆனால் மாநில மந்திரிகள் தடுப்பதால் அது அவரால் செய்ய முடியவில்லையே.


venugopal s
ஜூன் 23, 2024 11:16

செய்தியை நன்றாகப் படியுங்கள், ரயில் பயணக் கட்டணத்துக்கான ஜி எஸ் டி வரி நீக்கப் படவில்லை! என்ன ஒரு தந்திரம்!


Ms Mahadevan Mahadevan
ஜூன் 23, 2024 02:33

உணவு பொருட்கள், அரிசி சிறு தானியங்களுக்கு கிஸ்தி விலக்கு தரமட்டாராம் அரசின் வெட்டி செலவுகளை குறைக்க யோசனை சொல்லமாட்டாராம். தொழிலாளர் மினிமம் பென்ஷன் 1000 தர சொல்லமாட்டாராம் பால் கெனுக்கு வரி போடுவாராம்


Anantharaman Srinivasan
ஜூன் 22, 2024 23:23

கணவன் மனைவிக்குள் அபிப்ராய பேதம் இருந்து அது வெளியில் தெரியவந்தால் அல்லது மாற்று கட்சியிலிருந்தால் 24% ஜிஎஸ்டி போடலாம். வருமான வரியுடன் கட்டி விடலாம்.


இறைவி
ஜூன் 22, 2024 21:12

தமிழ் நாட்டின் மானத்தை இந்த கருத்து ஞானசூன்யங்கள் மலை ஏற்றி கொண்டிருக்கின்றன. GST வரி விதிப்பு என்பது அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் மத்திய நிதி அமைச்சரும் கூடிய முடிவெடுப்பது. ஏதோ மத்திய அரசு மட்டும் முடிவெடுத்து வரி விதித்தது போல இங்கு தொடற்சியாக பொய் பிரச்சாரம் செய்ய வேண்டியது. இங்கிருந்து போன தமிழ் நாட்டு நிதி மந்திரி கூட்டத்தின்போது MPக்களுடன் காண்டீனில் உட்கார்ந்திருந்தாரா? தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்தால் கட்சி வேறுபாடின்றி பொய் கருத்து பிரச்சாரம் செய்யாதீர்கள். மத்திய நிதி அமைச்சர்தான் பெட்ரோல் டீசல் குறைந்த GST விதிப்பில் கொண்டு வந்தால் அவைகளின் விலை குறையும் என்று தொடர்ந்து கூவுகிராரே. உச்ச அளவு மாநில VAT வரி விதிப்பிலிருந்து அவைகளை விடுவிக்க தமிழ் நாட்டிற்கு மனமில்லை. ஆட்டு மந்தைகள்!!!


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 21:47

200 ஆளுங்க அப்படித்தானே எழுதுவாங்க? தின்ன உப்புக்கு விசுவாசம்.


K.n. Dhasarathan
ஜூன் 22, 2024 20:28

நிதி அமைச்சருக்கு எது முக்கியம் என்பது தெரியவில்லை ? பால் கானுக்கு வரி ஏன் ? அதுவும் 12%, எல்லோரும் உபயோகிப்பது, முக்கியமாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவது தெரியவில்லையா ? ஒரு பெண்ணாக இருந்து கொண்டு கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் செயல்படுவது எந்த அமைச்சரும் செய்யாத சாதனை தான், அவார்டு கிடைக்கட்டும்.


Ravichandran S
ஜூன் 23, 2024 04:26

ஏதோ நிர்மலா மட்டும் செய்கிறார் என சொல்கிறீர்கள் ஆனால் எல்லா மாநில நிதி அமைச்சர்களும் ஆமாம் சாமி போடுகின்றனர். என் நம்ப தங்கம் கூட இவர்களை விட்டுவிட்டு அவர்களை குறை சொல்வது மட்டும். விட்டு விடுங்கள். யாராக இருந்தாலும் சரி இதைத்தான் செய்ய முடியும். ஏன் பெட்ரோல் டீசலை GST க்குள் கொண்டு வர முடியவில்ல மாநில அரசுகள் எதிர்ப்பு காட்டுகிறது. வருமானம் குறைந்துவிடும் பெட்ரோல் 100 ரூபாய் என்றால் கலால்வரி, இத்யாதிகள் 45 சென்று விடுகிறது. அப்ப 55 க்கு தான விற்க வேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 22, 2024 20:21

குலேபகாவலி படத்து பாட்டை ஒருதரம் கேட்டுடுங்க. இன்னும் எங்கெல்லாம் வரி போடலாம்னு ஐடியா கிடைக்கும். அப்படியே தமிழ் நாட்டுல வயித்து வலியால அம்பது அறுபது பேரு செத்து போயிட்டாங்களாம். அதுனால வயித்துவலிக்கும் வரி போடலாம்.


sankaranarayanan
ஜூன் 22, 2024 20:10

ஏன் இனிமேல் பிள்ளையோ பொண்ணோ பெற்றால் அந்த பெற்றோர்கள் இருவருக்குமே வாரிசுவரி வாரிசுவரி விதிக்கலாமே எப்படி எங்கள் யோஜனை இதனால் ஜனத்தொகையும் குறையும் ஜிஎஸ்டி வரியும் வசூலித்தாற்போலாகும்


கோவிந்தராஜ
ஜூன் 22, 2024 20:03

இன்னும் நல்லா தேடி பாருங்க. ஏதாவது விடுபட்டுற போகுது


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 22, 2024 19:59

போட்டுத் தாளிச்சுடுங்கோ ...... நடுத்தர வகுப்பினரை படுகுழியில் தள்ளிடுங்கோ .....


Sakthi,sivagangai
ஜூன் 22, 2024 20:13

ஏலே நடேசா இதை நீ அமெரிக்காவில் இருந்து கருத்து போடுவதுதான் விசித்திரம்......வேலையை பாரு


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ