உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்றத்துக்கு உடந்தையாக உள்ள நபர்களும் குற்றவாளிகளே: ஐகோர்ட்

குற்றத்துக்கு உடந்தையாக உள்ள நபர்களும் குற்றவாளிகளே: ஐகோர்ட்

மும்பை : 'குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர்கள் குற்றவாளிக்கு இணையான பொதுவான நோக்கத்தில் செயல்படுவதால் அவர்களும் குற்றவாளிகளே' என, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. கடந்த 2015ல், மஹாராஷ்டிராவின் சந்திராபூர் அருகே உள்ள வனப்பகுதிக்கு, தன் ஆண் நண்பருடன் இளம்பெண் ஒருவர் சென்றார். அப்போது, அங்கு வந்த நான்கு பேர் தங்களை வனக் காவலர்கள் எனக் கூறி, இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டினர். அதில், இருவர் அந்த பெண்ணை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தனர். மற்ற இருவர், அவருடன் வந்த ஆண் நண்பரை கடுமையாக தாக்கினர். உண்மையான வனக் காவலர்கள் வந்ததை அடுத்து, நால்வரும் தப்பிச் சென்றனர். இது குறித்து இளம்பெண் அளித்த புகாரை அடுத்து நால்வர் மீதும் கூட்டு பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நால்வருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த சம்பவத்தில் பலாத்காரத்தில் ஈடுபடாத இருவர், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல் முறையீடு செய்தனர். அதில், 'பாதிக்கப்பட்ட பெண்ணை நாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. எங்கள் இருவரையும் குற்றவாளிகளாக கருத முடியாது' என, தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, நால்வர் மீதான தண்டனையை நீதிபதி உறுதி செய்தார். அவர் தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:இந்த வழக்கில், கூட்டு பலாத்கார சம்பவத்தை தடுக்கும் வகையில், ஆண் நண்பர் தாக்கப்பட்டுள்ளார். அவ்வாறு தாக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த குற்றச் சம்பவம் நிகழாமல் தடுத்திருக்க முடியும். குற்றவாளிகள் நால்வரும் பொதுவான நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு ஆண் நண்பர் மீதான தாக்குதலே ஆதாரமாகும். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவருக்கு, மற்ற இருவரின் செயல் உடந்தையாக உள்ளது. ஆகையால், இவர்களும் குற்றவாளிகள் தான். நால்வருக்கும் அளிக்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஆக 01, 2024 15:08

அப்போ ஜாஃபர் சாதிக்குடன் வணிகக் கூட்டணி வைத்திருந்த ...


சுரேஷ்குமார்
ஆக 01, 2024 10:36

குற்றவாளிகளுக்கு ஆஜராகி வாய்தா வாங்கிக் குடுக்கும் வக்கீல்கள்? குற்றவாளிகளுக்கு நெஞ்சுவலி வந்து அட்மிட் ஆகும் ஆஸ்பத்திரிகள், டாக்டர்கள்? சொல்லுங்க எசமான்


அப்பாவி
ஆக 01, 2024 10:34

உதாரணமாக குற்றவாளி கொலை செய்யறதுக்கு முன்னாடி டீ குடிச்சால், அந்த டீக்கடைக் காரர் குற்றவாளியே. நியூ சம்ஹிதா இப்பிடித்தான் சொல்லுது போலிருக்கு.


pmsamy
ஆக 01, 2024 08:40

குற்றங்கள் ஏன் நடக்கிறது அதை வருமுன் தடுப்பது எப்படி என்று யோசிக்காமல் ஆராய்ச்சி செய்யாமல் இருக்கும் நீதிமன்றங்கள் குற்றவாளிகள் தான்


GMM
ஆக 01, 2024 08:03

குற்றவாளிக்கு உடந்தையாக உள்ள நபர் குற்றவாளி. உண்மை. சமூக நீதி. குற்றவாளிக்கு உடந்தையாக அருகில் வசிக்கும் அமைதி காக்கும் சமூக மக்களும் குற்றவாளியாக பல சமூகத்தில் கருதப்படுகிறது. இதனை தான் குற்ற பரம்பரை என்று இந்து மதத்தில் ஏற்படுத்திய காங்கிரஸ், பிரிட்டிஷ், சிறுபான்மை மதத்தில் அதிகம் இருந்தும் உண்மைகளை மறைத்து விட்டது. குற்றம் குறைய, உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து, செயல் படுத்த வேண்டிய தீர்ப்பு.


Thirumalaimuthu L
ஆக 01, 2024 07:27

சட்டத்தின் படி குற்றம் செய்ய உடந்தையா இருப்பவர்களும் குற்றவாளிகள் தான் என்பது எல்லா சாமானிய மக்களுக்கும் தெரியும். ஆனால் சட்டம் படித்த நீதிபதிகளுக்கு இப்போது தான் தெரியும் என்பது தான் வினோதம்


Palanisamy T
ஆக 01, 2024 03:02

ரொம்ப நல்ல தீர்ப்பு. வருங்காலத்தில் வரப் போகும் குற்றங்களை தடுக்கின்றத் தீர்ப்பு. குற்றங்களை செய்துவிட்டு ஏன் குற்றவாளிகளாக அலையவேண்டும்?


சமீபத்திய செய்தி