உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி செய்திக்கான பாக்ஸ்

மோடி செய்திக்கான பாக்ஸ்

பிரதமர் மோடி தன் உரையில், பெண்களுக்கானசம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறையை, 12 வாரங்களில் இருந்து, 26 வாரங்களாக உயர்த்தி உள்ளோம். ''பேறுகால விடுமுறையை உயர்த்துவது என்பது பெண்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை. மேலும், தாயின் அரவணைப்பில் குழந்தை கள் இருப்பது, சிறந்த குடிமகன்களை உருவாக்கும். வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஆதரவாக மனிதாபிமானத்துடனும், அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும் நாம் அணுக வேண்டும்,'' என, அவர் குறிப்பிட்டார்.

பேறுகால விடுமுறை நீட்டிப்பு

யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக, பல நீதிமன்றங்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளன.நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, 2019ல் ஒரு வழக்கில், யு.சி.சி., அமல்படுத்துவதில் தாமதம் செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. கடந்த, 2003ல், அப்போதைய தலைமை நீதிபதி வி.என்.கரே ஒரு வழக்கின்போது, அரசியலமைப்புச் சட்டத்தின், 44வது பிரிவின்படி, நாகரிக சமூகத்தில், மத ரீதியிலான சட்டங்கள் மற்றும் தனிநபர் சட்டங்கள் தேவையில்லை என்பதை குறிப்பிட்டார். கடந்த, 2015ல், நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, தனி நபர் சட்டங்களால் ஏற்படும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், யு.சி.சி., அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.இந்தாண்டு ஜூலையில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், 'மதங்கள் மற்றும் நம்பிக்கை என்ற போர்வையில், அடிப்படைவாதம், பழமைவாதம், அதீத நம்பிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது. யு.சி.சி., என்பது காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது, உடனடியாக நடைமுறைக்கு வர வேண்டும்' என்று கூறியது.அலகாபாத் உயர் நீதிமன்றம், 2021 நவம்பரில், அரசியலமைப்புச் சட்டத்தின், 44வது பிரிவை நடைமுறைபடுத்தும்படி, மத்திய அரசுக்குஉத்தரவிட்டிருந்தது. டில்லி உயர் நீதிமன்றமும், 2021ல் இதே கருத்தை தெரிவித்திருந்தது.யு.சி.சி., அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதை அமல்படுத்த காலக்கெடு எதையும் நிர்ணயிக்க முடியாது என, கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

சிவில் சட்டம் குறித்த உத்தரவுகள்

6,000 சிறப்பு விருந்தினர்கள்

நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், எல்லை சாலை கழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள், பழங்குடியின தொழில்முனைவோர், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட, 6,000 பேருக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி இவர்கள் நேற்று சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ