மேலும் செய்திகள்
முதல் பக்க மோடி செய்திக்கான பாக்ஸ்
42 minutes ago
அபாயம்!
42 minutes ago
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து 130 பேர் மாயம்
42 minutes ago
பாக்., ராணுவத்தினர் மீது வெடிகுண்டு தாக்குதல்
42 minutes ago
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியான பின் கடந்த ஒரு மாதத்தில் நடந்த நிகழ்வுகள்:l ஏப்ரல் 24: கர்நாடக மாநிலம், ஹாசனில் லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பெண்களை மிரட்டி பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினl ஏப்ரல் 26-: முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிரஜ்வல் உடனடியாக நாட்டை விட்டு தப்பி ஓட்டம். அவர் ஜெர்மனிக்கு சென்றதாக கூறப்பட்டதுl ஏப்ரல் 27: பிரஜ்வல் வழக்கை விசாரிக்க எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைக்கும் என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இந்த விவகாரத்தில் அரசுக்கு, மாநில மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதினார்l ஏப்ரல் 30: கட்சியில் இருந்து பிரஜ்வலை சஸ்பெண்ட் செய்து ம.ஜ.த., அதிரடி அறிவிப்பு. எஸ்.ஐ.டி., விசாரணைக்கு வரவேற்புl மே 1: எஸ்.ஐ.டி., விசாரணையில் கலந்து கொள்ள தனது வழக்கறிஞர்கள் மூலம் பிரஜ்வல் அவகாசம் கேட்டார். எக்ஸ் பதிவில், 'உண்மை விரைவில் வெல்லும்' என்றார் பிரஜ்வல். பிரஜ்வல் துாதரக பாஸ்போர்டை முடக்கும்படி பிரதமருக்கு முதல்வர் கடிதம்l மே 3: கடந்த 2019 முதல் 2022 வரை பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுl மே 4: பெண் கடத்தல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பல முறை நோட்டீஸ் கொடுத்தும் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 'புளூ கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டதுl மே 7: சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க குமாரசாமி வலியுறுத்தல்l மே 8: ரேவண்ணா சிறையில் அடைப்புl மே 9: வீடியோ வெளியான விவகாரத்தில் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக புகார். இதை அவர் மறுத்தார்.l மே 10: பிரஜ்வல் வீடியோக்களை வெளியிட்டதாக, பா.ஜ.,வின் தேவராஜே கவுடா கைதுl மே 18: பிரஜ்வலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்ததுl மே 23: நாடு திரும்பி எஸ்.ஐ.டி., முன் ஆஜராகும்படி பிரஜ்வலுக்கு அவரது தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கைl மே 27: நாடு திரும்பப் போவதாகவும், 31ல் பெங்களூரில் எஸ்.ஐ.டி., முன் ஆஜராவதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ மூலம் அறிவிப்புl மே 31: வெள்ளிக் கிழமை அதிகாலை 1:24 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரஜ்வல் ரேவண்ணா கைது.-- நமது நிருபர் -
42 minutes ago
42 minutes ago
42 minutes ago
42 minutes ago