உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிராஜ் போர் விமானங்கள் பெற கத்தாருடன் மத்திய அரசு பேச்சு

மிராஜ் போர் விமானங்கள் பெற கத்தாருடன் மத்திய அரசு பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : கார்கில் போர், பாலகோட் தாக்குதல்கள் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியவை மிராஜ் ரக போர் விமானங்கள். தற்போது நம் விமானப்படையில், 48 மிராஜ் போர் விமானங்கள் உள்ளன. வடகிழக்கு பகுதிகளில் இதன் தேவை அதிகரித்துள்ளதால், மேற்காசிய நாடான கத்தாரிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட மிராஜ் விமானங்களை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.இதன்படி, 12 விமானங்கள் நல்ல பயன்பாட்டு நிலையில் இருப்பதாகவும், இதை 5,000 கோடி ரூபாய்க்கு கத்தார் அரசு, நமக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பராமரிப்பு எளிதாக இருக்கும் என்பதாலும், இதை வாங்குவதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.இந்த விமானங்கள் அனைத்தும், அவற்றில் பொருத்துவதற்கான ஆயுதங்கள் மற்றும் கூடுதல் இன்ஜினோடும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sabitharaja
ஜூன் 23, 2024 13:16

20 வருடம் பழைய மிராஜ் விமானத்தை ஏன் வாங்க வேண்டிய தேவை என்ன வந்தது இதன் முந்தைய விலை 6000 கோடி 20 வருடம் கழிந்த நிலையில் இந்த விமானம் 5000 கோடி என்றால் எப்படி வாங்கலம் தேவையில்லமால் அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் காத்தார் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாடு என்பது அரசு அறியவில்லையா ?


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 14:09

புதிய விமானத்தின் விலையிலிருந்து தேய்மானம் கழித்துதான் தற்போதைய விலையை நிர்ணயிக்க வேண்டும். அவர்கள் வாங்கிய விலையின் அடிப்படையிலல்ல. புதிய போர் விமானங்களை ஆர்டர் செய்து வரவழைக்க பல ஆண்டுகள் ஆகும். கத்தர் நாடே போர்களில் ஈடுபடாததால் தேய்மானம் குறைவாகவும் இருக்கும்


முருகன்
ஜூன் 23, 2024 11:19

பயன்படுத்திய பொருளை வாங்கினால் தான்.... நிறைய காரணங்கள் மற்றும் காசு கிடைக்கும் போல.....


venugopal s
ஜூன் 23, 2024 11:09

பழையதை பத்து வாங்கி அதற்கு ரிப்பேர்,ஸ்பேர்ஸ் என்று மேலும் பணத்தை வீணடிப்பதை விட புதியதாக ஐந்து வாங்குவது புத்திசாலித்தனம்!


Kalyanaraman
ஜூன் 23, 2024 07:42

தரம், சிக்கனம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க மத்திய பாஜக. இங்கோ கடலில் பேனா வைப்பதிலும், சிலை வைப்பதிலும், போதை மருந்து, கள்ளச்சாராயம் விற்பதிலும் மும்மரமாக இருக்கிறார்கள்.


Mohamed Yousuff
ஜூன் 23, 2024 15:28

What is your answer for Vallabhai Patel statue in Gujarat installed by Modi?


Rpalnivelu
ஜூன் 23, 2024 06:27

எங்கேப்பா ராவூல், இங்கிருக்கானா இல்ல பட்டயாவா?உடனே கிளம்பி இதிலும் ஏதாவது ஊழல் என்று குற்றம் சொல்லி பிதற்றி திரிவானே.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ