உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப்பெட்டி: ராகுல் சொல்கிறார்!

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப்பெட்டி: ராகுல் சொல்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி என காங்., எம்.பி., ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

வெளிப்படைத்தன்மை

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஆராய யாரையும் அனுமதிக்கப்படுவதில்லை. நிறுவனங்கள் பொறுப்புக் கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

s sambath kumar
ஜூன் 19, 2024 17:29

நல்லவேளை பிரதமர் ஆகலை. பேச்சு பூராவும் படு அபத்தம்.


Swaminathan L
ஜூன் 19, 2024 15:13

ஓட்டு இயந்திரத்தை பரிசோதிக்க வாருங்கள் என்று தேர்தல் ஆணையம் பகிரங்கமாக அழைத்தால் போக மாட்டீர்கள். விவிபாட் இயந்திரத்தைப் பற்றி எவ்வளவு புளுக முடியுமோ அவ்வளவு புளுகியாகிற்று. பேட்டரியில் இயங்கும், வெளியிலிருந்து எந்த வகையிலும் எந்த ஸிக்னலும் பெற முடியாத, எளிமையான மின்னணு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று வெற்றுக் கூப்பாடு இன்னும் எத்தனை நாளைக்கு? யுடிஎஃப் கூட்டணி ஜெயித்த கேரளத்தில் மட்டும் ஓட்டு இயந்திரங்கள் ஒழுங்காக இயங்கினவா? பழைய ஓட்டுச்சீட்டு முறை இனி இங்கே வரவே போவதில்லை. எனவே, நொண்டிக் குதிரை சறுக்கியதாக சாக்குச் சொல்வதை நிறுத்தி விட்டு கட்சிக்கு உயிரூட்ட உருப்படியான வழி ஏதாவது பாருங்கள்.


Srinivasan Krishnamoorthi
ஜூன் 18, 2024 14:51

தன்னை அறியாமல் EVM கருப்பு பெட்டி என கூறி விட்டார். விமானங்களின் கருப்பு பெட்டியை அவர் ஓப்பிடுவதால், EVM ல் எந்த ஆணியையும் பிடுங்க வாய்ப்பில்லை கடைசியில் என்ன நடந்தது என்ற மர்மத்தை மட்டுமே அறிய முடியும் என இதிலிருந்து ஒத்துக்கொள்கிறார் என அறிவோம்


kamal
ஜூன் 18, 2024 11:56

உண்மைதான். ஆனால் கடந்த 5 வருடங்களாக இது பற்றி பேசாமல் இருந்தீங்களா?


P Karuppasamy
ஜூன் 18, 2024 11:04

நேரு காங்கிரஸ் மா பெரும் கருப்பு கட்சி பிரிட்டிஷ் அரசு உருவாக்கியது. முதலில் அதை நாட்டில் இருந்து துடைத்து எரிய வேண்டும். நேதாஜி, வல்லபாய் பட்டேல், காமராஜர், தேவர் அவர்கள் அனைவரும் நேரு காங்கிரஸ் குடும்பத்தால் வீழ்தபடவர்கள்


Ranganathan
ஜூன் 18, 2024 08:41

கள்ள வோட்டை போடுவது குறைந்துவிட்டது. அதை திரும்பி கொண்டுவந்தால் சுலபமாக ஆட்சிக்கு வரலாம். Electronic Voting Machine is hindering this and hence not good according to Mr. Raghul


Rajagopalan R
ஜூன் 18, 2024 06:02

இ வி எம் எந்திரத்தை நம்பாதவர்கள் அவர்கள் ஜெயித்ததும் கோல் மால் என்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேப்பர் முறையில் and ஹாஅந்த தொகுதில் தேர்தல் நடத்த போராடனும்


Rajagopalan R
ஜூன் 18, 2024 06:02

இ வி எம் எந்திரத்தை நம்பாதவர்கள் அவர்கள் ஜெயித்ததும் கோல் மால் என்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேப்பர் முறையில் and ஹாஅந்த தொகுதில் தேர்தல் நடத்த போராடனும்


Gurumurthy R
ஜூன் 17, 2024 20:15

இப்போதுதான் தான் தோற்றுவிட்டதையே உணர்கிறார் போல... உடனே ஏவம் மேல் பழி போடுகிறார். தேர்தல் கமிஷன் EVMஐ சோதித்துக்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு சந்தர்ப்பம் அளித்த போது தாய்லாந்தில் இருந்திருப்பாரோ ....


anuthapi
ஜூன் 17, 2024 16:16

பீ ஜே பி உஷார். இது அவர்களுடைய தந்திரம். இவர்களுக்கு இதில் தில்லுமுல்லு செய்ய தெரிந்தவர்கள் இருப்பார்கள் போல் உள்ளது. இவ்வருட இறுதியில் நடக்க இருக்கின்ற 4 மாநில சட்டமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்ய தயார் ஆகிறார்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி