உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 வயது மகன் நரபலி கொடூர தந்தை கைது

4 வயது மகன் நரபலி கொடூர தந்தை கைது

பல்ராம்பூர், சத்தீஸ்கரில், 4 வயது மகனை நரபலி கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மஹுதிஹ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கம்லேஷ் நாகேசியா, 26. இவர், தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கினார்.நள்ளிரவில் எழுந்த கம்லேஷ் நாகேசியா, வீட்டின் முற்றத்தில் வைத்து, கோழியை கத்தியால் வெட்டினார். தொடர்ந்து, துாங்கிக் கொண்டிருந்த தன் 4 வயது மகனை எழுப்பி, வீட்டின் முற்றத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது, மகனின் கழுத்தை அறுத்து அவர் கொலை செய்தார். துாக்கத்தில் இருந்து எழுந்த கம்லேஷ் நாகேசியாவின் மனைவி, மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கேட்ட போது, மகனை நரபலி கொடுத்து விட்டதாக, கம்லேஷ் நாகேசியா மனைவியிடம் தெரிவித்தார்.இந்த தகவல் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து, கம்லேஷ் நாகேசியாவை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:கம்லேஷ் நாகேசியா மனநலம் பாதிக்கப்பட்டவர். ஒரு மாய தோற்றம் தன் முன் தோன்றி, யாரையாவது நரபலி கொடுக்க வேண்டும் என, தொடர்ந்து மனதுக்குள் குரல் எழுப்பியதாகவும், அதனால், தன் மகனை நரபலி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.இது குறித்து விசாரித்து வருகிறோம். உண்மையிலேயே அவர், மனநலம் பாதிக்கப்பட்டவரா என்றும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை