உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி மக்களை பாடாய் படுத்தும் வெயில்: 5 பேர் பலி; 12 பேர் நிலைமை மோசம்

டில்லி மக்களை பாடாய் படுத்தும் வெயில்: 5 பேர் பலி; 12 பேர் நிலைமை மோசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெயில் காரணமாக, 5 பேர் டில்லி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.நாடு முழுவதும் கோடை காலம் இன்னும் முடிவடையாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.டில்லியில் 45 டிகிரி செல்சியஸ் (113 பாரன்ஹீட்) வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. டில்லியில் பகலில் வெயிலின் கொடுமை போக, இரவிலும் வெக்கை நீடிக்கிறது. இந்நிலையில், இன்று(ஜூன் 19) வெயில் காரணமாக, 5 பேர் டில்லி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 22 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெயிலால் பெரும்பாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balasubramanian
ஜூன் 20, 2024 08:56

தனி ஒரு மனிதனுக்கு தண்ணீர் கூட கிடைக்காவிடில் தில்லியை அழித்திடுவோம் என்று பாட அங்கே ஒரு பாரதி இல்லையே!


ES
ஜூன் 19, 2024 22:50

Praying for fast recovery of everyone effected


இனியா
ஜூன் 19, 2024 21:26

நம்ம கேரண்ட்டீ ஆள் என்ன செய்யறாரு?


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2024 19:58

சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பெட்ரோல் டீசலின் வரியை அதிகரித்தால், மக்கள் காரில், பைக்கில் போவது குறைந்து சைக்கிளில் செல்வார்கள். தொந்தி தொப்பை குறையும். சுகர் வியாதி குறையும். காற்று மாசடையாது . சுத்தமான காற்று, தண்ணீர், அனைவருக்கும் கிடைக்க ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது நல்லது. மோடியின் ஆட்சியில் அபிரதமான வளர்ச்சி இருப்பதால், ஏராளமாக பணம் பொதுமக்களிடம் புழங்குகிறது. ஒரு கொத்தனார் சட்டைப்பாக்கெட்டில் ஒரு லட்சம் ரூபாயை பார்க்கலாம். ஒரு கவுன்சிலர் பாக்கெட்டை துழாவினால் ஒரு கோடி ரூபாயை பார்க்கலாம். லட்சம் ரூபாய் ஆயிரமாகிவிட்டது. கோடி ரூபாய் லட்சம் ஆகிவிட்டது. அதனால் அரசின் வரியை அதிகரிப்பது பொருள்களின் நுகர்வை தடுக்கும். சுற்றுப்புற சூழல் கெடாது. இல்லையெனில் மக்கள் கண்டதையும் வாங்கி, தேவையின்றி சுற்றுலா சென்று சுற்றுப்புற சூழலை கெடுத்துவிடுவார்கள். மக்கள் பலியாவதை தடுக்க மக்களின் அதிகபட்ச நுகர்வை தடுக்க வேண்டும். மக்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் குறைந்த பொருள்களை வைத்துக்கொண்டு நிரம்ப மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். அதுபோல் இப்போது மக்களை பழக்க வேண்டும். செல் போன் வரிகொண்டுவந்தால், சிறுவர்களின் கண்கள் பாதுகாக்கப்படும். அவர்கள் கண்பார்வையை இழந்துகொண்டிருக்கிறார்கள். மேலைநாடுகள் இந்திய சிறுவர்களை குருடர்களாக்கி கொண்டிருக்கிறார்கள். ஒரு நிமிடம் கூட கேம் விளையாடாமல் இருக்கமுடியாது அளவிற்கு அடிமையாகிவிட்டார்கள்.


jeyakumar
ஜூன் 19, 2024 17:39

இலவசத்தை நம்பி ஓட்டு போட்டால் இது தான் கதி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை