உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா -வியட்நாம் நட்புறவு : மோடி பெருமிதம்

இந்தியா -வியட்நாம் நட்புறவு : மோடி பெருமிதம்

புதுடில்லி: இந்திய -வியட்நாம் நட்புறவு வலுவாக உள்ளதாக மோடி தெரிவித்தார். 3 நாள் அரசு முறைப் பயணமாக வியட்நாம் நாட்டின் பிரதமர் பாம் மின் சின் ஜூலை 30ம் தேதி டில்லி வந்தார். அவரை மத்திய அமைச்சர், வியட்நாம் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.இன்று ( ஆக.,1) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியா - வியட்நாம் இடையே 6 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து பிரதமர் மோடி கூறியது, இந்தோ பசிபிக் விவகாரங்களை பொறுத்த வரையில் எங்கள் பார்வையில் இந்தியா- வியட்நாம் இடையே நட்புறவு வலுவானது. வளர்ச்சியை ஆதரிக்கிறோம் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை