உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சி தலைவர் பதவி கார்கே - தன்கர் காரசார வாதம்

எதிர்க்கட்சி தலைவர் பதவி கார்கே - தன்கர் காரசார வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி :ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சபை தலைவர் ஜக்தீப் தன்கர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் கூறியதாவது:எதிர்க்கட்சி தலைவர் என்பதற்காக எப்போது பார்த்தாலும் எழுந்து பேசுவது என்பது சரியல்ல. ஒவ்வொரு முறையும் சபைத் தலைவரை அவமதிப்பதை ஏற்க முடியாது. திடீரென எழுந்து இஷ்டம் போல் பேசுகிறீர்கள். நான் என்ன சொல்கிறேன் என்பதை காது கொடுத்து கேட்பதில்லை.ராஜ்யசபா வரலாற்றில், நாட்டின் பார்லிமென்ட் ஜனநாயக வரலாற்றில், உங்களைப் போன்று இவ்வாறு யாரும் அவமதித்ததில்லை. புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய மரியாதையை காப்பாற்றி கொள்ளுங்கள். உங்கள் மரியாதையை காப்பாற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.அந்த நேரத்தில், காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் எழுந்து பேச முயன்றார். அப்போது தன்கர் கூறிஉள்ளதாவது:நீங்கள் மிகவும் புத்திசாலி; திறமையானவர். கார்கேயின் இடத்தில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். உண்மையில், அவருடைய வேலையை நீங்கள் செய்து வருகிறீர்கள். இது, கார்கேவுக்கு அவமானம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு கார்கே கூறியதாவது:நீங்கள் ஜாதியின் அடிப்படையில் செயல்படுகிறீர்கள். அதனால் தான், தலித்தான எனக்கு எதிராக பேசுகிறீர்கள். என்னை, இந்த பதவியில் உட்கார வைத்தது, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா. ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள், என்னை ஈடு செய்ய முடியாது. அவரை புத்திசாலி என்று நீங்கள் கூறுவதைப் பார்த்தால், என்னை முட்டாள் என்கிறீர்களா.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கிருஷ்ணதாஸ்
ஜூலை 03, 2024 10:05

இதில் ஜாதி எப்படி வருகிறது? ஆட்சியில் இல்லாத போதே ஜாதி அரசியலா?


சந்திரசேகர்
ஜூலை 03, 2024 06:16

இதற்கு அது பதில் இல்லையே. பதில் இல்லை என்றால் சாதியை இழுத்து விட்டால் பதில் சரியாக இருக்காது. சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் நாங்கள் முன்னேற வில்லை என்றால் யார் தப்பு. உங்களை ஆண்டவர்கள் தப்பா அல்லது அவர்களுக்கு ஓட்டு போட்ட உங்கள் தப்பா. இதிலிருந்து ஒண்ணு தெரியுது இட ஒதுக்கீடு னால் ஒன்றும் பயன் இல்லை


Kasimani Baskaran
ஜூலை 03, 2024 05:24

காங்கிரஸ் கட்சியினர்களுக்கு மண்டை சூடாகிவிட்டது போல தெரிகிறது. எந்தவித நாகரீகமும் இல்லாமல் அப்படியே எழுத்து பேச ஆரம்பிப்பார்கள். சிலர் இன்னும் மன்னராட்சி நடப்பது போலவே நடந்து கொள்வார்கள்..


இராம தாசன்
ஜூலை 03, 2024 02:15

எதற்கு எடுத்தாலும் சிறு பான்மையினர் / தாழ்த்தப்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லி அடுத்தவர்களை தூண்டி விடுவதே பொழப்பாக போய்விட்டது. விடியல் கட்சியின் சகவாசம் - இது எங்கே போய் முடிய போகிறதோ தெரியவில்லை


Kasimani Baskaran
ஜூலை 03, 2024 00:18

எதிர்க்கட்சி என்றால் தலையில் கொம்பெல்லாம் இல்லை. அமளி செய்யவும் கூட ஒரு எல்லை உண்டு. பத்தாண்டுகள் அமளி செய்ததை யாரும் ரசிக்கவில்லை. கடாக்கட் தொழில் நுணுக்கம் வைத்து ஏமாற்றி ஜெயிக்க அடுத்த முறை வாய்ப்பில்லை.


மேலும் செய்திகள்