உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை: உ.பி., முடிவு

லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை: உ.பி., முடிவு

புதுடில்லி, உத்தர பிரதேசத்தில், 'லவ் ஜிஹாத்'தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம் அல்லாத பெண்களை, இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கில் காதலித்து திருமணம் செய்வது, 'லவ் ஜிஹாத்' எனப்படுகிறது.இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்கும் வகையில், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே சட்டம் அமலில் உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில், உ.பி., சட்ட விரோத மதமாற்ற தடை திருத்த சட்டம் -- 2024 ஏற்கனவே அமலில் உள்ளது.இந்நிலையில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில், சட்ட விரோத மதமாற்ற தடை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சட்டத்திருத்த மசோதாவை, சட்டசபையில் மாநில அரசு நேற்று அறிமுகப்படுத்தியது.நாளை மறுதினம் இந்த சட்டத்திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ., அரசின் இந்த முடிவை, பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி விமர்சித்துள்ளது.“சமூகத்தில் பகைமையை உருவாக்கும் நோக்கில், லவ் ஜிஹாத் தில் பா.ஜ., அரசு திருத்தம் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான அக்கட்சியின் வெறுப்புணர்வு தெளிவாக தெரிகிறது. ''பா.ஜ.,வின் பிளவுபடுத்தும் அரசியல் வெற்றி பெறாது,” என, சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் பக்ருல் ஹசன் சந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

R Kay
ஆக 01, 2024 00:42

வெளிநாடுகளிலிருந்து வரும் நன்கொடைகளை தடுத்தாலே போதும். இப்போதே ஐரோப்பாவின் தேர்தல் முடிவுகளை அமைதி மார்க்கம்தான் தீர்மானிக்கிறது. இங்கும் கூட பாராளுமன்ற கூச்சல், குழப்பங்கள், மணிப்பூர் போன்ற கலவரங்களனைத்தும் அந்நிய சக்திகளின் அறங்கேற்றமே என்று சொல்லப்படுகின்றது. மதமாற்றங்கள் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 31, 2024 12:37

ஒரு பெரிய நெட்வொர்க்கே இதில் இருக்கு..


Tirunelveliகாரன்
ஜூலை 31, 2024 10:48

இங்க கருத்துக்களை பார்க்கும்போது காட்டு மிராண்டிகள் உலகத்தில் இருக்கிறமோ என்று எண்ண தோன்றுகிறது.


ஆசாத்
ஜூலை 31, 2024 10:02

ஹி..ஹி.. கல்யாணமே ஆயுள் தண்டனைதானே சாமி.. அதனால் தானே நீங்க கல்யாணமே பண்ணிக்கலை.


Mohan
ஜூலை 31, 2024 09:53

யோகியாரே ...நீங்க தான்யா அடுத்த பிரதமரா வரணும் அதுக்கான வேலைகளை செய்து முடிங்க ..உங்களால தான் இந்த மதத்தையும் நாட்டையும் காப்பாற்ற முடியும் ... மோடிக்கு முடியல ...புது ரத்தம் தேவைப்படுது ...அந்த ஆண்டவன் அருளாலே நீங்க எங்களுக்கு கிடைத்தால் பெரிய வரம் ...


veeramani
ஜூலை 31, 2024 09:26

யூகி யின் முடிவு வரவேற்கின்றேன் வேண்டும் இதேபோல் இந்துக்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பவரின் தண்டனையும் அவசியம் சட்டமாக்கப்படவேண்டும்


Nandakumar Naidu.
ஜூலை 31, 2024 08:36

சூப்பர் யோகி ஜி அவர்களே, நீங்கள் தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும். பாரதம் முழுவதும் லவ் ஜிஹாத் தடை சட்டம், மத மாற்ற தடை சட்டம், மதரஸாக்கள் தடை, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்கள் விடுவித்தல், ஹலால் சர்டிஃபிகேட் தடை, மசூதிகளில் ஒலிபெருக்கி தடை, காமன் சிவில் கோடு முக்கியமாக பாரததத்தை ஹிந்து ரஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் மத சார்பாற்ற என்ற வார்த்தையை நீக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் தான் பிரதமராக பெரும்பான்மையுடன் வரவேண்டும்.


Duruvesan
ஜூலை 31, 2024 07:54

யோகி ஜி, இடை தேர்தல் 10 தொகுதிக்கு நீங்களே சங்கு வூதியதற்க்கு நன்றி


Mohan
ஜூலை 31, 2024 09:40

அட வெண்ணெ இதுலன்ன தப்பு ...நீ பாட்டுக்கு மதம் மாத்துவே கல்யாணம் பண்ணிக்குவே ..சரி உங்கள மாதிரி கத்திக்கு மதம் மாறின ஆட்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்


GMM
ஜூலை 31, 2024 07:53

மக்கள், சமூக, மத அடிப்படையில் வாழ்க்கை அமைத்து விட்டனர். அரசு மாறுபட்ட வாழ்க்கை முறை கொண்ட கலப்பு திருமணம், மத மாற்றம் அங்கீகாரம், ஊக்குவித்தல் கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெண் குழந்தைகள் கள்ளி பால் கொடுத்து கொல்ல பட்டனர். சாது சமூக பெண்களை காதலித்து கலப்பு மணம் புரிகின்றனர். அந்த சமூகங்களில் போதிய பெண்கள் இல்லாமல் பல ஆண்களுக்கு சுமார் 50 வயது வரை திருமணம் முடிக்க முடியவில்லை. இனி முடியாது. இது தொடரும்போது அந்த சமூகம், கலாச்சாரம் அழிந்து விடும். உ.பி. முடிவு சரியே. ஆயுள் தண்டனை. பெண் மீட்பு. பெற்றோரிடம் ஒப்படைப்பு அவசியம். சமாஜ்வாடி சுயரூபம், மத ரூபம் வெளிப்படுகிறது. பெரிய நாட்டாமை ராகுல் சுருக்கெழுத்து அரசியல் சாசனம் பார்த்து என்ன தீர்ப்பு சொல்வார் என்று தீர்மானிக்க முடியும்.


N.Purushothaman
ஜூலை 31, 2024 07:16

காலத்துக்கேற்ற கட்டயாமான சட்ட திருத்தம் ... இதில் எழுதப்படாத சிலுவைப்போர் நடத்தும் மதத்தையும் உள்ளே சேர்க்க வேண்டும் ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை