உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுச்சாவடி வாரியான தரவுகளை வெளியிடுவது குழப்பம் ஏற்படுத்தும்

ஓட்டுச்சாவடி வாரியான தரவுகளை வெளியிடுவது குழப்பம் ஏற்படுத்தும்

புதுடில்லி, ஓட்டுப்பதிவு நாளின் முடிவில் ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுகளின் விபரங்களை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் கமிஷனை கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதையடுத்து, அது தொடர்பான பதில் மனு நேற்று தேர்தல் கமிஷனால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு விபரங்கள் அடங்கிய '17 சி' படிவத்தை பொது வெளியில் வெளியிட முடியாது. ஏனெனில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களைத் தவிர வேறு யாருக்கும் அதை வழங்க சட்டப்பூர்வ ஆணை இல்லை. இது தொடர்பான விதிகள் கட்டமைப்பு கடந்த 60 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. படிவம் 17சி யை முழுமையாக வெளியிடுவது, ஒட்டுமொத்த தேர்தலையும் சீர்குலைக்கும் மற்றும் கேடு விளைவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
மே 24, 2024 12:18

தரவுகள் வேண்டும் எனும் பலரின் குறிக்கோள்? வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பின்னர் வாக்கு எண்ணிக்கையின் போது சிறிய அளவு வேறுபாடு இருக்கும். அதனை வைத்து தேர்தல் செல்லாது என வழக்குப் போடலாம். நாடுமுழுவதற்கும் தடையுத்தரவு வாங்கலாமெனும் நப்பாசைதான். நேர்மையாக தேர்தலை சந்திக்கும் துணிவில்லை. சட்டப்படி வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட வேண்டும் எனும் விதியே கிடையாது.


ஆரூர் ரங்
மே 24, 2024 09:39

முன்பு வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குச் சீட்டுக்களை ஐம்பது ஐம்பதாகக் கட்டி ஒரு டிரம்மில் போட்டு நன்கு கலந்த பிறகு எண்ணுவது வழக்கம். அதனால் எந்த வாக்குச்சாவடியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு என்பது தெரியாமல் இருந்தது. இப்போது EVM இயந்திர முறையிலும் அது போன்ற ஏதாவது ஏற்பாட்டை செய்ய முயற்சிக்கலாம்.


Narayanan Muthu
மே 24, 2024 09:18

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இழக்கும் வகையில் சில பல நிகழ்வுகள் நடந்து இருப்பதால் தேர்தல் நேர்மையான முறையில்தான் நடந்துள்ளது என மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பூத் வாரியான ஒட்டு பதிவை தேர்தல் ஆணையம் வெளியிடுவதுதான் ஒரே வழி இல்லையேல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புக்கள் அதிகம்


ஆரூர் ரங்
மே 24, 2024 12:22

பூத் வாரியாக முடிவுகளை வெளியிடத் துவங்கிய பின் ஆளுங் கட்சி தம்மை எதிர்த்து வாக்களித்த பகுதிகளை ஓரவஞ்சனையுடன் நடத்துவது, அடியாட்களை வைத்துத் தாக்குவது, அடுத்த தேர்தலில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவு நீக்கம் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இனி பூத் வாரி வாக்குப்பதிவு மற்றும் முடிவுகளை வெளியிடும் வழக்கத்தை நிறுத்த வேண்டும்.


GMM
மே 24, 2024 08:26

ஆதார் இணைப்பு, இரட்டை பதிவு, கள்ள குடியேறிகள் வாக்குரிமை தடுக்க வழி, ஓட்டுக்கு பணம் போன்ற பற்றி வழக்கு போட்டால் ஜனநாயகம் சீர் திருத்தம் ஆகாது? மத இட ஒதுக்கீடு சில மாநிலம் அமுல்? எதிர்த்து வழக்கு இல்லை மக்கள் தொகை பெருக்கம் உள்ளாட்சி அமைப்புகள், சட்ட பேரவை, மற்றும் பாராளுமன்ற போன்ற மூன்றுக்கும் ஒருவருக்கு ஓட்டுரிமை தேவையா? ஒன்றுக்கு மட்டும் போதும் அதிக வாக்கு, தொகுதி வெற்றியை தீர்மானிப்பது போல் குறைந்த அளவு எதிர் வாக்கு இருக்க கூடாது என்று இருந்தால் தமிழகத்தில் பிராமின், சைவ பிள்ளை, சைவ முதலி, ராஜா, மதுரை சௌராஷ்ட போன்ற பல சமூக மக்கள் ஒடுக்க பட்டு இருக்க மாட்டார்கள் ஒருவர் ஒரு தொகுதியில் வாக்களிக்க குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு மேல் தங்கி இருக்க வேண்டும் அதாவது அங்கு பிறந்து இருக்க வேண்டும் சிறிய சாதிகள் பிழைக்க முடியாமல் மத மாற்றம், சற்றும் பொருத்தம் இல்லாத வரன் தேடி, சிதைந்து வருகின்றனர் தேர்தல் பத்திர வழக்கில் குழப்ப வாதம் செய்து, நீதிமன்றத்தை ஏமாற்றியவர்கள்? உச்ச நீதிமன்றம் செல்ல பிள்ளை? யார் வளர்பு பிள்ளை?


GMM
மே 24, 2024 08:07

வாக்கு சாவடி வாரியாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் வற்புறுத்துவது தவறு இதில் வாக்காளர் எந்த கட்சிக்கு வாக்களித்து இருப்பர் என்று யூகித்து, இடையூறு செய்ய முடியும்? இனி பயத்தில் வாக்களிப்பது குறையும் ஜனநாயக சீர் திருத்த சங்கம் முக்கிய அரசு அமைப்பை சட்டம் மூலம் சில இடையூறுகள் செய்து வருகிறது? காலப்போக்கில் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் மற்றும் ஜனாதிபதி பணி மீது அவர்களுக்கு குறைபாடு தெரிந்து மனு செய்தால், உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா?


Balasubramanian
மே 24, 2024 07:13

குட்டையைக் குழப்பி அதில் பப்ளிசிட்டி குளிர் காய இருக்குது இங்கே ஆயிரம் பொதுநல வழக்காடும் கும்பல் - எவ்வளவு தான் தாங்கும் தேர்தல் ஆணையம்! இதில் பெருகும் ஓட்டளிக்க வாராத வெற்று வாய் பேச்சு வம்பர் கூட்டம் வேறு!


S S
மே 24, 2024 06:56

வேட்பாளர் மற்றும் அவரது முகவர்களுக்கு வழங்கும் போது ஏன் அந்த விவரங்களை பொதுதளத்தில் வெளியிட கூடாது


ஆரூர் ரங்
மே 24, 2024 09:40

கட்சிகள் பூத் ஏஜெண்ட்களிடமிருந்து வாக்குப்பதிவு விவரங்களை தெரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


Kasimani Baskaran
மே 24, 2024 05:59

வாக்குரிமையை ஆதருடன் இணைக்க வேண்டும் இல்லை என்றால் இது போல யார் ஓட்டுப்போட்டார்கள், யார் ஓட்டுப்போடவில்லை என்ற தகவலைக்கூட கண்டு பிடிக்க முடியாது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை