உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடத்தப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு; கொத்தடிமைகளாக ஒப்படைக்க திட்டமா ?

கடத்தப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு; கொத்தடிமைகளாக ஒப்படைக்க திட்டமா ?

லக்னோ: பீஹாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சட்ட விரோதமாக, பஸ்சில் கடத்தி செல்லப்பட்ட 95 குழந்தைகளை குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் மீட்டனர். பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என விசாரணை நடந்து வருகிறது. தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக ஒப்படைக்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பீஹாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக, குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக, கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறியதாவது: அயோத்தியில் நாங்கள் குழந்தைகளை மீட்டோம். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்கு இடைப்பட்டவர்கள். குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை. பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படும். பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஏப் 27, 2024 15:45

ராம ராஜ்யம் நடக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது நிச்சயமாக நடந்திருக்காது என்று சொல்லி வைப்போம். நாம் ஏதாவது சொல்லி உடனே வந்து நமக்கு தேசப்பற்று, தேச ஒற்றுமை பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்!


Indian
ஏப் 27, 2024 13:46

குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் அவர்களை இப்படி அறிவில்லாதவர்களாக மாற்றி குழந்தை தொழிலாளர்களாகிவிட்டால் அப்புறம் எப்படி பாரதம் வல்லரசாகமுடியும் பதில் கூறுங்கள் அரசியல்வாதிகளே?


Ramesh Thangavelu
ஏப் 27, 2024 11:15

அன்புச் செல்வங்களான வயது குழந்தை முதல் வயது நிரம்பிய குழந்தைகள் தனது நண்பர்களுடன் கொஞ்சி விளையாட வேண்டிய வயதில் அவர்களை கொடுமை படுத்தும் கயவர்களே, உங்களுக்கு நெஞ்சில் ஈரம் இல்லையா மனசாட்சி இல்லாத மனித மிருகங்களை தூக்கில் போடும் அளவுக்கு சட்டம் திருத்தப்பட வேண்டும்


எஸ் எஸ்
ஏப் 27, 2024 10:55

நான்கு வயது குழந்தை என்ன வேலை செய்யும்? அட பாவிகளா, இது போல் எத்தனை குழந்தைகள் கடந்த காலங்களில் கடத்த பட்டார்களோ?


ponssasi
ஏப் 27, 2024 10:36

இத்துடன் இந்த செய்தி முடிவடைகிறது குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்தார்களா? இல்லை கடத்தல் கும்பலுடன் அனுப்பப்பட்டார்களா?


Shunmugham Selavali
ஏப் 27, 2024 10:32

வளர்ந்து வரும் நம்நாட்டில் பெற்றவர்கள் குழந்தைகளை வளர்ந்து ஆளாக்க முடியவில்லையா? இவர்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவர்களுடைய வருமானம் எங்கே போகின்றது. அரசு இலவச உணவு பொருட்கள் தருகின்றது. பொருப்பு இல்லாத பெற்றவர்வர்கள். விழிப்புணர்வும் கண்காணிப்பும் அரசு ஏற்ப்படுத்த வேண்டும்.


N Annamalai
ஏப் 27, 2024 09:05

முதல்வர் யோகி அவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை