உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத மாற்றம் நடக்கும் கூட்டங்களை நிறுத்துங்கள்! அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

மத மாற்றம் நடக்கும் கூட்டங்களை நிறுத்துங்கள்! அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரயாக்ராஜ் : 'மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவர்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o1yofo43&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உத்தர பிரதேசத்தின் ஹாமிர்புர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ராம்காளி பிரஜாபதி. இவரது சகோதரர் ராம்பால். மனநலம் பாதிக்கப்பட்டவர்.

விசாரணை

இவர்கள் வசிக்கும் கிராமத்தை சேர்ந்த கைலாஷ் என்பவர், டில்லியில் நடக்கும் மதக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றால், பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என, கிராம மக்களிடம் கூறியுள்ளார்.ராம்பாலின் மனநல பிரச்னையையும் குணப்படுத்துவதாக ராம்காளியிடம் கூறினார். இதை நம்பி, கைலாஷுடன் ராம்பாலை அனுப்பி வைத்துள்ளார். கிராம மக்கள் சிலரும் சென்றனர்.டில்லியில் நடந்த மதக்கூட்டத்துக்கு சென்ற கிராம மக்கள் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்பட்டு ஊர் திரும்பினர். ஆனால், ராம்காளியின் சகோதரர் மட்டும் திரும்பவில்லை. இது குறித்து கைலாஷிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் திருப்திகரமாக இல்லை. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைலாஷை கைது செய்தனர்.அவர் ஜாமின் கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் பிறப்பித்த உத்தரவு:மதப்பிரசாரம் என்பது அந்த மதத்தை பற்றிய கருத்துகளை பரப்புவது தானே தவிர, ஒருவரை அவரது சொந்த மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாற்றுவது அல்ல. இது போன்ற பல்வேறு வழக்குகளை இந்த நீதிமன்றம் எதிர்கொண்டு வருகிறது. எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுகின்றனர். உ.பி., முழுதும் இந்த போக்கை காண முடிகிறது.

ஜாமின் நிராகரிப்பு

இது போன்ற மத கூட்டங்கள் நடப்பதை உடனடியாக நிறுத்தவில்லை எனில், நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் ஒரு நாள், சிறுபான்மையினராக மாறிவிடுவர். டில்லியில் நடந்த மதக்கூட்டத்துக்கு கிராம மக்களை அழைத்து சென்ற கைலாஷ், அவர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியுள்ளார் என்பதை விசாரணை அதிகாரி தெளிவாக பதிவு செய்துள்ளார்.எனவே, குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதால் மனுதாரருக்கு ஜாமின் நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Barakat Ali
ஜூலை 04, 2024 12:04

உள்ளூர் பாதிரிமார்கள் போப் அவர்களை வரவழைத்து அவரையும் சக்கர நாற்காலியில் இருந்து விடுவித்து குணப்படுத்தினால் நன்று ..........


Lion Drsekar
ஜூலை 03, 2024 14:54

எம்மக்கள் அடுத்து இந்த நீதியரசருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புகார் செய்வார்கள், வழக்கு தொடர்வார்கள், நாடு தழுவிய பாராட்டுங்கள் நடைபெறும், பதவியில் இருந்து நீக்குவதற்கு போராட்டங்கள் மற்றும் எல்லா காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்படும் . அந்நியர்கள் ஆட்சி மட்டும் செய்தால் ஒரு கவலையும் இல்லை, மற்றவர்கள் வாழ்வில் தலையிடுவது , அவர்கள் வணங்கும் , கடைபிடிக்கும் சடங்குகள் , வழிபாடும் இடங்களை ஆகியவைகளை இடிப்பது, சூறையாதுவது , என்று இருந்ததால் , எல்லாவற்றையும் தனி ஒருவர் , அவர்சார்ந்த இயக்கத்துக்கு கட்டுப்பட வைத்ததால் வந்த வினைதான் . இதனால்தான் ராமன ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்றார்கள் போலும், அப்படி இருக்க கவிஞர் வாலி ஐயா கூறியது போல் மதம் என்பது என்று மதத்தின் பிடியில் சிக்கியிருப்பதால் எல்லோருமே எந்த நிமிடம் என்னாகுமோ என்ற பயத்தில் வாழவேண்டிய ஒரு இலையை உருவாக்கிவிட்டார்கள், 1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்தது என்ன ? வந்தே மாதரம்


Govindaraj Gudiappa
ஜூலை 03, 2024 12:27

இது போன்ற கருத்துக்களை நாடு முழுவதும் இருக்கின்ற நீதி மன்றங்கள் மூலம் அமுல் படுத்தவேண்டும், இந்த கும்பல்கள் ஒழிக்க வேண்டும். இதை இந்தியா அரசாங்கம் நிறைவேற்ற தவற கூடாது. பா. ஜா. க செய்யும் என்று நினைத்தோம் ஆனால் இந்துக்களுக்காக எதையும் இவர்கள் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றினால் மிகவும் நல்லது.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 11:29

அலகாபாத் உ மன்றத்தில் சங்கிகள்தான் நீதிபதிகளாக உள்ளனரோ ???? ஊ ஊ பீயிஸ் காட்டம் .......


raja
ஜூலை 03, 2024 11:28

நல்ல தீர்ப்பு வரவேற்கிறேன்..... மதமாற்றம் இப்போது தீராத தலைவலியாக இந்தியாவிற்கு உருவெடுத்துள்ளது......


Rajarajan
ஜூலை 03, 2024 11:05

ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா?? பிராமணரை வந்தேறிகள் என கருணாநிதி சொன்னதும், அதை ஆமோதித்து கேலிசெய்தனர் திராவிட கட்சியினர். ஆனால், இந்தியாவின் சரஸ்வதி நதி கரையோரம் வந்த வாரிசுகள் இவர்கள் என நீதிமன்றம் சென்று நிரூபித்தனர். பிராமணர்கள், இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, இந்தியாவின் புனித தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரத்தை தங்கள் புனித யாத்திரை தலமாக ஏற்ற இவர்கள் வந்தேறிகளாம். ஆனால், மற்ற நாட்டிலுள்ள ஜெருசலம் மற்றும் மெக்காவை ஏற்று, இந்தியாவிலிருந்து புனித யாத்திரை செல்லும் மற்ற பிரிவினர் வந்தேறிகள் இல்லயாம். இதெல்லாம் நம்புகிற மூடர் கூட்டம் இருக்கும் வரை, திராவிட கட்சிகளுக்கு கொண்டாட்டம் தான்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 11:33

ஓங்கோலன் தன்னை வந்தேறி என்று தமிழன் கண்டுபிடிக்கக்கூடாது என்பதால் கண்டுபிடித்த டெக்கினிக்கு அது. அதைப்பற்றி தமிழன் சிந்திக்கக் கூடாது என்பதால் திராவிட மாடல் அடிக்கடி பேசப்படுகிறது ...... "நாம தமிழர்கள்... நமக்கெதுக்கு திராவிடம்?" ன்னு தமிழன் யோசிக்க ஆரம்பிச்சா இவனுங்கோ பொழப்பு புட்டுக்கும் ....


Iyyappan
ஜூலை 03, 2024 08:40

This is being carried out systematically in a locality in Chennai where the high profile ministers are staying. They are corrupting the young minds as soon as their school examinations are announced in the guise of prayer. It is impossible without the support of ruling political functionaries who are responsible for changing the age old street name in their name for reciprocal benefits. Hindus should realise at least now.


kulandai kannan
ஜூலை 03, 2024 08:26

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா போன்ற கிறித்தவ நாடுகளில் வறுமை தாண்டவமாடுகிறது. மத அடிப்படையில் பிரிந்து சென்ற கிறித்தவ தென் சூடானில் இன்று ஓயாத உள்நாட்டுச் சண்டை. குழுத் தலைவர்களின் காலணிகளை முத்தமிட்டு போப் வேண்டியும் பிரயோஜனமில்லை. இந்த லட்சணத்தில்........


rsudarsan lic
ஜூலை 03, 2024 07:37

தமிழ் நாட்டில் கன்யாகுமரி எனும் மாவட்டம் உள்ளது


sridhar
ஜூலை 03, 2024 08:06

அது மட்டும் தான்


R.RAMACHANDRAN
ஜூலை 03, 2024 06:55

இந்து மதத்தின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்களை தள்ளியே வைத்துள்ளதால் இந்த நாட்டில் மதம் மாறுகின்றனர்.மத மாற்றம் செய்வதை தடுக்க முதலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளை நிறுத்தி அவர்களும் மனிதர்கள் அவர்கள் உள்ளேயும் தெய்வம் உள்ளது என மதிக்க வேண்டும்.


sridhar
ஜூலை 03, 2024 08:08

கிறிஸ்துவத்தில் உள்ள ஜாதிகள், ஏற்றத்தாழ்வுகள் பற்றி தெரியுமா , சொல்லவா ..


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 15:52

99 சதவீத சர்ச் களில் பட்டியலின மக்கள் பாதிரி பதவிக்கு வர முடியாது. செத்தாலும் தனித்தனி கல்லறைகள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ