உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதலிக்கு குறுஞ்செய்தி வாலிபர் கை விரல் கட்

காதலிக்கு குறுஞ்செய்தி வாலிபர் கை விரல் கட்

சங்கர்புரா: பெங்களூரு சங்கரபுராவில் வசிப்பவர் ஹர்ஷித்குமார், 24. இவருக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.இவ்விஷயம் இளம்பெண்ணின் காதலன் சஷாங்க், 24 க்கு தெரிந்தது. காதலிக்கு குறுந்தகவல் அனுப்ப கூடாது; அவருடன் பேசக்கூடாது என்று, ஹர்ஷித்குமாரை எச்சரித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை.நேற்று முன்தினம் இரவு ஹர்ஷித்குமார் நடத்தி வரும், மலர்களை அலங்கரிக்கும் கடைக்கு சென்ற சஷாங்க், அவரது நண்பர் சந்தன், 24 ஆகியோர், ஹர்ஷித்குமாரின் தோள்பட்டையில் கத்தியால் வெட்டினர்.தடுக்க முயன்ற போது, இடது கை விரலில் வெட்டு விழுந்து விரல் துண்டானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சஷாங்க், சந்தன் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 02, 2024 12:28

பெண்களுக்காக ஏண் அடித்துக்கொண்டு சாகிறீர்கள்? இப்பொழுது அந்த பெண்ணின் பெற்றோர்கள், அவளை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள் அவள் உங்கள் ரெண்டு போரையும் மறந்து, மூன்றாவதாக வந்தவரிடம் குடித்தனம் செய்ய கிளம்பிவிடுவாள் இதெல்லாம் தேவையா? இதெல்லாம் நாம் சினிமாவிலும், டிவி சீரியல்களிலும் பார்க்காததா?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ