உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளத்தின் நடுவே மாணவர்களை தோளில் சுமந்து சென்ற ஆசிரியர்

வெள்ளத்தின் நடுவே மாணவர்களை தோளில் சுமந்து சென்ற ஆசிரியர்

ஐதராபாத் : தெலுங்கானாவில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இம்மாவட்டத்தின் ஜெய்ஹிந்த்புரம் அடுத்துள்ள பெஞ்சிகாலபேட் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், அங்குள்ள ஓடையைக் கடந்தே பள்ளிக்கு வரும் நிலை உள்ளது.கனமழை பெய்து வரும் சூழலில், சிறுவர்கள் பள்ளிக்கு செல்லும் போது, ஓடையில் குறைந்த அளவே தண்ணீர் சென்றது.மாலை பள்ளி முடிந்து வீட்டு வரும் போது, ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆர்ப்பரித்து சென்ற தண்ணீரை கண்ட சிறுவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.அப்போது, அங்கு வந்த அவர்களின் பள்ளி ஆசிரியர் சந்தோஷ், 10க்கும் மேற்பட்ட சிறுவர்களை ஒருவர் பின் ஒருவராக தோளில் சுமந்து கரை சேர்த்தார். உள்ளூர் கிராம மக்களுக்கும் ஆசிரியருக்கு உதவும் வகையில், பிற மாணவர்களை சுமந்து சென்று கரை சேர்த்தனர். காட்டாற்று வெள்ளத்தின் நடுவே தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவர்களை பத்திரமாக கரை சேர்த்த ஆசிரியரை கிராம மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ديفيد رافائيل
ஜூலை 27, 2024 21:54

அவர் ஆசிரியராக உதவி செய்யவில்லை சிறுவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். அந்த இடத்துல யாராக இருந்தாலும்கூட அவர் இப்படி தான் செய்திருக்கலாம். உதவி மனப்பான்மை எல்லாருக்கும் வராது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை