உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று விசாரணை

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று விசாரணை

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.அவரது கோர்ட் காவல் நிறைவடைந்த நிலையில் இன்று (ஜூலை07) மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் அவரது கோர்ட் காவலை ஜூலை 15 வரை நீட்டித்து நீதிபதி காவேரிபவேஜா உத்தரவிட்டார்.இந்நிலையில் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ