உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு மாதம் ரூ.1,500 ஹிமாச்சலில் அமலுக்கு வந்தது

பெண்களுக்கு மாதம் ரூ.1,500 ஹிமாச்சலில் அமலுக்கு வந்தது

சிம்லா, ஹிமாச்சல பிரதேசத்தில், 18 - 59 வயது பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை மாநில அரசு நேற்று வெளியிட்டது. ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது பிரசாரம் செய்த காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் அங்குள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது.

எதிர்க்கட்சிகள் கேள்வி

அந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக சுக்விந்தர் சுகு பொறுப்பேற்றார்.பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட உதவித் தொகை வழங்கப்படாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில், இது தொடர்பான அறிவிப்பை மாநில அரசு நேற்று வெளியிட்டது. முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது: மாநிலத்தில் உள்ள 18 - 59 வயது பெண்களுக்கு, 'இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டம்' கீழ் மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும். ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெற உள்ள இந்த திட்டத்திற்காக, முதற்கட்டமாக 800 கோடி ரூபாய் செலவிடப்படும். வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுவோர் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைய முடியாது.

அதிருப்தி

மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பில் உள்ள பணியாளர்கள், பஞ்சாயத்து ராஜில் பணிபுரியும் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அனைத்து பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் பெரும்பாலான பிரிவுகள் நீக்கப்பட்டது, ஹிமாச்சலில் உள்ள பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

DVRR
மார் 15, 2024 17:40

உனது சொந்தப்பணம் கட்சிப்பணம் கொடு நாங்கள் ஒன்றும் சொல்லமாட்டோம்???இது வரியினால் வந்த பணம் சிலருக்கு உதவி செய்ய அல்ல இந்த பணம் Infrastructure Industry Development இதற்காக வந்த பணத்தை உன் பெயரை சொல்லி பயன்படுத்தாதே குழந்தாய்


C.SRIRAM
மார் 15, 2024 15:10

யாரு அப்பன் வீட்டு பணம் ?. கடை தேங்காயை வழி பில்லருக்கு உடைப்பது போல . இம்மாதிரி நடைமுறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதெப்படி அரசியலில் மேல்மட்டத்திலிலுள்ள யாருக்கும் கண்ணில் படவில்லை என்பது தெரியவில்லை . முட்டாள் அரசியல் வியாதிகள் தங்கள் மாநிலங்களை இலங்கை மாதிரி மாற்றமல் ஒழியமாட்டார்கள் போலும் .


M Ramachandran
மார் 15, 2024 12:51

விடியலின் (உருட்டல் ) திட்டம் வேலை செய்கிறது. கான்க்ரீசும் இந்த கூட்டத்தில் பங்கெடுத்து Rs.1,00,000/- ரீல் விட்டிருக்கிறது. ஆகையினால் மக்களியென மிக கவனமாகா மிகவும் எச்சரி கையாகா இருக்க வேண்டும் உங்கள் உள்ளாடய் உருவப்படம்


ஆரூர் ரங்
மார் 15, 2024 10:41

லோக்சபா தேர்தலில் ஒரு சீட் கூட வாங்க வாய்ப்பில்லை. கட்சியே கலகலத்துப் போயி உள்ளது. எம்எல்ஏக்க‌ள் ஓட்டம். . இதில் இலவச???? அறிவிப்பு ஒரு கேடா?


Ramesh Sargam
மார் 15, 2024 07:13

'தகுதி' உள்ளவர்களுக்கு மட்டும்தான் அந்த உதவித்தொகை. அது என்ன 'தகுதி' என்று தேர்தலுக்கு முன்னமே கூறமாட்டார்கள். வெற்றிபெற்று, ஆட்சி அமைத்தபிறகு 'தகுதி' பற்றி பேசுவார்கள், பெண்களை ஏமாற்றுவார்கள் இந்த ஏமாற்று பேர்வழிகள்.


Kumar
மார் 15, 2024 00:30

பெண்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறதோ இல்லையோ தினமலர் நாளிதல் அதிருப்தி உள்ளது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை