உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியில் குப்வாரா மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து குஹல்தார் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.அந்த பகுதியில், நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்த இரண்டு பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நம் வீரர்களும் பதிலுக்கு சுட்டனர். இதில், இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.அவர்களின் உடைமைகளை சோதித்தபோது, இரண்டு ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல் உட்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருந்தன. அவற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை