உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2023ல் நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக 28 ஆயிரம் புகார்கள்

2023ல் நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக 28 ஆயிரம் புகார்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக, கடந்த 2023ம் ஆண்டு, 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதிவாகியுள்ளதாக தேசிய மகளிர் கமிஷன் தெரிவித்துள்ளது.கடந்த 2023-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதிவான குற்றப்புகார் குறித்த தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு, பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, பாலியல் சீண்டல் ஆகிய குற்றங்கள் என 2023-ம் ஆண்டில் 28 ஆயிரத்து 811 வழக்குகள் பதிவாகியுள்ளன.இதில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 109 வழக்குகளுடன் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. டில்லியில் 2 ஆயிரத்து 411 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், 1,343 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன . இதில் வரதட்சணை தொடர்பாக 4 ஆயிரத்து 797 வழக்குகள் பதிவாகியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sivak
ஜன 02, 2024 13:01

தொண்ணூறு சதவீதம் பொய் புகார்கள் ...காழ்ப்புணர்ச்சி காரணமாக கூலிக்கு மாரடிக்கும் வக்கீல்கள் தூண்டுதலில் தொடுக்கப்படும் புகார்கள்


அப்புசாமி
ஜன 02, 2024 12:37

உ.பி இதிலெல்லாம் முதலிடம். பெண்களை சூப்பரா பாதுகாக்குறாங்க.


Ramesh Sargam
ஜன 02, 2024 00:54

பெண்களுக்கு ஏட்பட்ட அக்கிரமங்களுக்கு எதிராக, அவர்களுக்கு ஆதரவாக புகார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை